காற்றில் கலந்த தேவதை!
- வந்தனா ரவீந்திரதாஸ்
மயிலு....
பந்தமில்லை என்றாலும்...
ஏதோ ஒன்றில்
எங்களை கட்டியிழுத்தாய்

திரைத்துறையின்
கனவு கன்னிகள்
திரளென வந்தாலும்
அசலான பிரதி நீதானே?
நிகழ்வுகளின் தொகுப்பாய்
நெடுங்காலம் கடந்தாலும்
உன் புகழ்
என்றும் மறையுமா?
சாதனையும்-சோதனையும்
உன் தோள்களிலே
சமமாய் சுமந்தாயே...
சவாலான சாதனைகளே
உன் வெற்றியின்
சூட்சுமம் என்றாயே....
எங்கள் நெஞ்சங்களில்
முள் வலையை
படரவிட்டு..
பறந்து சென்றாயே....
இதயத்தில் படிமமாய்
உறைந்துபோன மயிலே...
எங்களுக்கு ஆறுதல்
வலை வீச மாட்டாயோ?
உன் நினைவலைகள்
என்றும் நிலைத்திருக்குமே...
கடலுக்கடியில்
இறுகி கிடக்கும்
பாறைபோல..
உன் கடைசி நிமிட
நிகழ்வுகளின்
மர்ம முடிச்சுகளை
அவிழ்ப்பது யாரோ?
ஆயிரம் இருந்தாலும்
எங்கள் மயிலுபோல வருமா
என்ற இறுமாறுப்பு....
எங்கள் அடிமனதில்
குறைவின்றி நீளும்...
தகனத்துக்குப் பின்
கனத்த மனதுடன்
உள்ளுக்குள் அழுது....
உணர்வாய் கரைந்து...
காற்றில்... உந்தன் கீதத்தை
தேடுகிறோம்.... உன்போலவே...
பூதங்கள் ஐந்திலும்
கலந்திட்ட மயிலே...
உனக்கே உயிரானோம்
எந்நாளும் உனை மறவோம்...
குறுகிய காலத்தில்
வென்றுவிட்டாய்
மகுடத்தையும் -
மரணத்தையும்..
இனியாவது நிம்மதி கொள்.. மீளாத நித்திரையில்!












Click it and Unblock the Notifications