10 லட்சம் கடனை அடைத்த AI.. அமெரிக்க பெண்ணுக்கு ChatGPT உதவியது எப்படி? 30 நாளில் மேஜிக்
நியூயார்க்: செயற்கை நுண்ணறிவான சாட்ஜிபிடி உதவியுடன் அமெரிக்காவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பெண் ஒருவர் வெறும் 30 நாளில் ரூ.10 லட்சம் கடனை திரும்ப செலுத்தி உள்ளார். அவர் கடன் செலுத்த சாட் ஜிபிடி எப்படி உதவியது? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தற்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ அனைத்து துறைகளிலும் நுழைந்து வருகிறது. மனிதர்கள் செய்யும் வேலைகளை போலவே ஏஐ பல வேலைகளை செய்கிறது. இதனால் வரும் காலத்தில் ஒவ்வொரு தொழில் நிறுவனங்களிலும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து ஏஐ பயன்பாடு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

தற்போது ஏஐ என்பது மக்களுக்கு அதிகளவில் உதவி செய்து வருகிறது. ஒரு விஷயத்தின் உண்மை தன்மையை ஏஐ பயன்படுத்தி தெரிந்து கொள்ள முடிகிறது. வரலாறு மற்றும் புரோகிராமிங் கோடிங் உள்ளிட்டவற்றையும் ஏஐ-யை பயன்படுத்தி எழுத முடிகிறது. இதனால் வரும் காலத்தில் வேலையிழப்புகள் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளது. குறிப்பாக ஐடி துறை அதிகளவில் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இப்படி ஏஐ-யால் ஆபத்து இருந்தாலும் கூட அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் அதனை பயன்படுத்தி 30 நாளில் தனது ரூ.10 லட்சம் கடனை திரும்ப செலுத்தி உள்ளார். அந்த பெண்ணின் பெயர் ஜெனிபர் ஆலன். இவருக்கு 35 வயது ஆகிறது. அமெரிக்காவின் டெலாவர் பகுதியில் வசித்த வருகிறார். ரியல் எஸ்டேட் மற்றும் கன்டென்ட் ரைட்டர் பணிகளை செய்து வருகிறார்.
இவரும் நன்றாக சம்பாதித்தாலும் கூட கண்மூடித்தனமாக செலவு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் சம்பாதியத்தை விட கூடுதல் செலவால் கடனில் சிக்கினார். கிரெடிட் கார்டுகளை அதிகமாக பயன்படுத்தி வந்தார்.
இதனால் ஒரு கட்டத்தில் கிரெடிட் கார்டு கடன் மட்டும் ரூ.19.7 லட்சம் வரை சென்றது. வாழ்க்கை தலைகீழாக மாறியது.இதனால் அதிர்ச்சியடைந்த ஜெனிபர் ஆலன் அந்த கடனை குறைக்க வேண்டும். உடனடியாக திரும்ப செலுத்த வேண்டும் என்று நினைத்தார். இதையடுத்து அவர் சாட் ஜிபிடியிடம் உதவி கோரினார். கடன் இல்லாமல் வாழ்வதற்கான எளிமையான நிதி ஆலோசனைகளை கேட்டுள்ளார்.
அப்போது சாட் ஜிபிடி சில முக்கிய பரிந்துரைகளை வழங்கி உள்ளது. தேவையற்ற செலவுகளை குறைப்பது எப்படி?, தேவையற்ற பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து கூடுதல் வருமானம் ஈட்டுவது எப்படி? என்பது தொடர்பான அறிவுரைகளை வழங்கியது. மேலும் அவர் சப்ஸ்கிரிப்ஸன் செய்திருக்கும் தேவையில்லாத ஆன்லைன் பக்கங்களை விட்டு வெளியேறவும் பரிந்துரை செய்தது.
இதனை ஜெனிபர் பின்பற்ற தொடங்கினார். உதாரணமாக அவரது தினசரி உணவு முறையில் செலவை குறைக்க அறிவுரை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் பேன்ட்ரி அடிப்படையிலான உணவு முறையை பின்பற்ற தொடங்கினார். இதன்மூலம் ரூ.50 ஆயிரம் வரை செலவை குறைத்தார். இப்படி பல்வேறு விஷயங்களில் அவர் சாட்ஜிபிடி பரிந்துரைகளை கேட்டு செயல்பட்ட நிலையில் ஒரு மாதத்திலேயே ரூ.10 லட்சத்தை மிச்சப்படுத்தி கிரெடிட் கார்டு கடனை திரும்ப செலுத்தினார். இதுபற்றி ஜெனிபர் ஆலன் தனது சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications