AI: இது புதுசா இருக்குப்பா.. புதுசா இருக்கு.. உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவை! அமெரிக்காவில் அறிமுகம்!
டெல்லி: செயற்கை நுண்ணறிவு, மனித வாழ்க்கையில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்தவகையில் உலகின் முதல் AI மசாஜ் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் குறிப்பிடத்தக்க இடையூறுகளை எதிர்கொண்டாலும், மசாஜ் சிகிச்சை போன்ற தொழில்களைச் செய்பவர்களுக்கும் AI-யால் ஆபத்து வரும் என்று நம்மில் பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த Aescape என்ற நிறுவனம், உலகின் முதல் AI இயங்கும் மசாஜ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகளவில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏஐ ரோபோ, சென்சார்களைப் பயன்படுத்தி, வாடிக்கையாளரின் உடலுக்கு மசாஜ்களை வழங்குகிறது. இதன் மூலம் மசாஜ் நுட்பங்களை சரியான அழுத்தம் மற்றும் வெப்பநிலையுடன் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மனித தொடுதலுடன் கூடிய மசாஜைப் போலவே இருக்கும் என்று இந்த நிறுவனத்தின் நிறுவனர் எரிக் லிட்மேன் கூறி உள்ளார்.
ஹோட்டல்கள், ஜிம்கள் மற்றும் ஸ்பாக்களில் தற்போதுள்ள ஆரோக்கிய சேவைகளுக்கு இது சரியான மாற்றாக இருக்கும். இது சேவை நேரங்களை நீட்டிக்கவும், புதிய வருவாயை உருவாக்கவும், பரந்த பார்வையாளர்களை ஈர்க்கவும் உதவுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications