கரூர் கம்பெனி ஓனர்! ஓடு ஓடு ஓடு ஓடு வரான் பாரு வேட்டைக்காரன்.. செந்தில் பாலாஜியை கிண்டல் செய்த விஜய்

Subscribe to Oneindia Tamil

கரூர்: ஊரை அடித்து உலையில் போட்ட கரூர் கம்பெனிக்காரர் ஓடிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என ஓடு ஓடு ஓடு ஓடு வரான் பாரு வேட்டைக்காரன் என்ற பாடலை பாடி செந்தில் பாலாஜியை விஜய் கிண்டல் செய்தார்.

கரூர் வெண்ணெய்மலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த முதல்வர் விஜய் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்தது ஏன் என்பதை விவரித்தார்.

senthil balaji joseph vijay

இதையடுத்து அவர் பேசுகையில், என் வாழ்வில் அதிக வலி, காயம் கொடுத்தது கரூர் சம்பவம்தான்.. அரியலூரில் கூட்டத்தை முடித்துக் கொண்டு விட்டு பெரம்பலூருக்கு சென்ற போது கூட்டம் அதிகமாகிவிட்டது , திரும்பி போய்விடுங்கள் என போலீஸ் எச்சரித்தனர்.

ஆனால் நாமக்கல் முடித்துக் கொண்டு விட்டு கரூருக்கு சென்ற போதும் கரூர் போலீஸார் எங்களை அலர்ட் செய்திருந்தால் நாங்கள் மக்களின் பாதுகாப்பு கருதி திரும்பி போயிருந்திருப்போம் இல்லையா?

போலீஸே எங்களை கரூருக்கு கொண்டு வந்துவிட்டது போல் நடந்தது. இதெற்கெல்லாம் காரணம் யார் என்பது எனக்கு தெரியும். கரூரில் கூடிய கூட்டத்திற்கு ஏற்ப போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததா?

இப்படியிருக்கும் போது வேதனையில் நான் வீட்டில் இருந்தால் ஓடி ஒளிந்துவிட்டேன் என்பதா? ஊழலில் திளைத்த கரூர் கம்பெனிகாரர் ஓடிவிட்டார். ஓடு ஓடு ஓடு ஓடு வரான் பாரு வேட்டைக்காரன் என்பது போல் அவர் ஓடிவிட்டார்.

இன்னொருவர் வெளிநாட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறார். நான் ஸ்டாலின் சாரை சொல்லலை, சிங்கப்பூரில் தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சரை சொன்னேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+