Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐடி ஊழியர்களுக்கு நிம்மதி! ஏஐயால் வேலை பறிபோகாது.. கூகுள் நிறுவன டாப் அதிகாரியே சொல்லிட்டாரே

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடியால் ஒருபக்கம் வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், மற்றொரு பக்கம் ஏஐ - ஐடி ஊழியர்களை கலங்கடித்து வருகிறது. ஏஐ தாக்கம் பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தினாலும், ஐடி துறையில் நாளுக்கு நாள் பணி நீக்கம் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், ஐடி ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட வைக்கும் விதமாக, கூகுள் நிறுவனத்தின் கிளவுட் சி.இ.ஓ. ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். ஏஐ துறையால் எந்த வேலையும் காலியாகவில்லை என்று கூறியுள்ள அவர், அதற்கான காரணங்களையும் கூறியுள்ளார். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ai-won-t-steal-your-jobs-it-will-empower-you-google-cloud-ceo-thomas-kurian

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

ஏஐ எனப்படும் தகவல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், டிஜிட்டல் உலகில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. ஏஐ துறையின் அபரிமிதமான வளர்ச்சியால் தற்போது பல்வேறு துறைகளிலும் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. மனித ஆற்றலுடன் ஒப்பிடுகையில், மிக எளிதாக ஒரு பணியை செய்து முடிக்கக்கூடிய காரணத்தால், பல டெக் நிறுவனங்களும் தற்போது ஏஐ பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன.

வேலை இழப்புகள் ஏற்படாது

இதனால், ஐடி துறைகளில் பெருமளவு வேலை இழப்பு அபாயத்தை ஏஐ ஏற்படுத்தியுள்ளது. உலகின் டாப் டெக் நிறுவனங்கள்கூட பணி நீக்கங்களை மேற்கொண்டுள்ளன. "ஏஐ பயன்பாடு காரணமாக வேலை இழப்புகள் ஏற்படாது, தரமே கூடும்" என்ற ஒரு வாதமும், "இல்லை... இல்லை... ஏஐயால் வரும் காலத்தில் 90 சதவீத வேலைகள் மாயமாகிவிடும்" என மற்றொரு தரப்பும் சொல்லும் கருத்தாக உள்ளது.

தாமஸ் குரியன் கருத்து

இந்த நிலையில்தான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலைகளை நீக்கிவிடும் என்ற அச்சங்கள் தேவையில்லை என்று கூறியிருக்கிறார் கூகுளின் கிளவுட் சி.இ.ஓ. தாமஸ் குரியன் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

"மனிதர்கள் முன்பு செய்ய முடியாத பணிகளைச் செய்து முடிக்க ஏஐ உதவும். ஏஐயின் முதன்மை நோக்கம் மனித திறன்களை மேம்படுத்துவதே தவிர, அவற்றை முழுமையாக மாற்றுவது அல்ல. கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் கஸ்டமர் சப்போர்ட் தொடர்புடைய பணிகளில் ஏஐயை கொண்டு வந்தது. இதனால், ஆரம்பத்தில் தங்கள் வாடிக்கையாளர் சேவை முகவர்கள் குறைவார்களா என்று கவலை எழுந்தது.

சுந்தர் பிச்சை கருத்து

ஆனால், யாரையும் வேலைநீக்கம் செய்யவில்லை. இந்த தொழில்நுட்பம், முன்பு வாடிக்கையாளர்கள் தவிர்க்கும் சிறிய கேள்விகள் போன்ற பணிகளை இப்போது கையாள்கிறது. இந்த திறன் விரிவாக்கம், ஊழியர்களைக் குறைப்பதற்குப் பதிலாக, ஏஐ செயல்படுத்துவது குறித்த கூகுளின் பரந்த தத்துவத்தை பிரதிபலிக்கிறது" என்றார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஏஐ டூல்ஸ் மூலம் தங்கள் பொறியாளர்களிடையே 10% உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளது என்றார். ஏஐ பயன்பாடு மூலம் வாரத்திற்கு எத்தனை மணிநேரம் கூடுதல் என்ஜினியரிங் செயல் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதன் மூலம் கூகுள் இதை கணிக்கிறது.

ஊழியர்களைக் குறைப்பதற்குப் பதிலாக, அடுத்த ஆண்டில் அதிக பொறியாளர்களை நியமிக்க கூகுள் திட்டமிட்டுள்ளதாக பிச்சை கூறினார். "நாம் செய்யக்கூடிய வாய்ப்புப் புலம் விரிவடைந்து வருகிறது" என்று அவர் விளக்கினார். ஏஐ ஆனது மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளை நீக்கி, பொறியாளர்களுக்கு அதிக ஆக்கபூர்வமான பணிகளுக்குச் சுதந்திரம் அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+