வந்தியதேவன் போன பாதையில் ஒரு பயணம்.. பொன்னியின் செல்வனை கண்முன் கொண்டு வந்த ஏஐ! AI Video
சென்னை: அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' புதினம் திரைப்படமாக வந்தாலும், அதை படிப்பதும் கேட்பதும் வாசகர்களுக்கு ஒருபோதும் சலிப்பளிக்காத, இனிமையான தருணமாகவே இருக்கும்.
புதினத்தின் தொடக்கத்தில், வந்தியதேவன் சோழ நாட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் காட்சி வாசகர்களின் நினைவில் என்றும் பதிந்திருக்கும். வீரநாராயணபுர ஏரியின் அழகை கல்கி வார்த்தைகளால் ஓவியம் வரைந்தது போல் சித்தரித்திருப்பார். படிக்கும் போதே அந்தக் காட்சிகள் கண்முன்னே விரிகின்றன.

வந்தியதேவனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அவரின் பயணங்களே 'பொன்னியின் செல்வன்' புதினத்தின் அடிநாதம் என்று கூட சொல்லலாம். அந்தப் பயணம் எப்படி இருந்திருக்கும்? அவர் கதையை எவ்வாறு முன்னெடுத்து செல்கிறார்? இதனை ஏ.ஐ வடிவில் ஒன் இந்தியா தமிழ் உங்களுக்கு காட்சியாக அளிக்கிறது.
அந்த அனுபவத்தை இந்த வீடியோவில் நீங்களும் காணலாம்..!












Click it and Unblock the Notifications