மென்பொருள் தலைநகராகும் சென்னை.. சிறுசேரியில் பிரம்மாண்ட டேட்டா சென்டர் திறப்பு.. 4200 கோடி முதலீடு
சென்னை: சென்னை சிறுசேரி வளாகத்தில் எஸ்டிடி ஜிடிசி இந்தியா நிறுவனம் தனது புதிய டேட்டா மையத்தைத் தொடங்கியுள்ளது. இது எஸ்டிடி ஜிடிசி இந்தியா நிறுவனம் தொடங்கிய நான்காவது டேட்டா சென்டர் ஆகும். அந்த மையத்தின் மொத்தத் திறன் 45 மெகாவாட் ஆகும் இதில் முதற்கட்டமாக 7.2 மெகாவாட் திறன் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனை காணொலி வாயிலாகத் திறந்து வைத்துள்ளார்.
இனி வரும் காலம் ஏஐ காலமாக இருக்க போகிறது என்பதை ஐடி நிறுவனங்கள் எல்லாம் உணர்ந்துவிட்டன. அதற்கு டேட்டா சென்டர்கள் தான் அவசியம். இலவமாக இந்தியாவில் பல்வேறு ஏஐக்கள் இயங்குவதற்கு தரவு தேவை என்பதற்காகத்தான்.. அப்படிப்பட்ட தரவுகளை சேமிக்க வேண்டியது, அதாவது டேட்டாக்களை சேகரிப்பது ஏஐக்களுக்கு அவசியம் ஆகும்.

ஏஐக்களுக்கு தரவு தான் உணவு
டேட்டா தான் இனி ஏஐக்களின் உயிர்நாடியாக, அதாவது உணவாக இருக்க போகிறது. ஆனால் ஏஐக்கள் சேகரிக்கும் தரவுகள் எல்லாம் சரியானதாக இருக்க வேண்டும் அல்லவா.. அதற்காக தரவு மையங்களை இந்தியாவின் முக்கியமான பல்வேறு மாநிலங்களை பிரபல ஏஐ நிறுவனங்கள் அமைக்கின்றன. அண்மையில் கூட கூகுள் நிறுவனம் அதானியுடன் இணைந்து ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில தரவு மையம் அமைக்க ஒப்பந்தம் செய்தது.
4200 கோடி முதலீடு
இந்நிலையில் எஸ்டிடி ஜிடிசி இந்தியா நிறுவனம் தரவு மையக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காகத் தமிழக அரசுடன் அந்நிறுவனம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் ₹4,200 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதற்காக சிறுசேரி வளாகத்திலேயே STT Chennai 4 என்ற மற்றொரு மையத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்த ஒரு வளாகத்தில் மட்டுமே சுமார் 130 மெகாவாட் வரை தரவுகளைக் கையாளும் வசதி உருவாக போகிறது.
ஏன் இது முக்கியம்
எஸ்டிடி ஜிடிசி இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிமல் கண்டேல்வால் கூறுகையில் "இந்தத் தொடக்கம் எங்கள் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல். சென்னையின் வளர்ச்சிக்கான எங்களது நீண்டகால உறுதிப்பாட்டை இது காட்டுகிறது," என்றார். தமிழ்நாடு தவிர, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களுடன் இணைந்து ஏஐ-க்கு ஏற்ற தரவு மையங்களை உருவாக்கவும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது
எஸ்டிடி நிறுவனம் இப்போது என்ன செய்கிறது
தற்போது இந்தியாவில் 10 நகரங்களில் மொத்தம் 30 தரவு மையங்களை எஸ்டிடி நிறுவனம் இயக்கி வருகிறது. இதன் மொத்தத் திறன் 400 மெகாவாட்டிற்கும் அதிகம். ஆகும். சென்னை சிறுசேரி இப்போது இந்தியாவின் மிக முக்கியமான தரவு மையங்களின் மையமாக மாறி வருகிறது.
-
ஆளுநர் ரவி, குஷ்பு குறித்து அவதூறு பேச்சு.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சிறை தண்டனை நிறுத்தம் -
டிரஸ் மாற்ற போன சீரியல் நடிகை கண்ட காட்சி.. பக்கத்து வீட்டுக்காரரின் கேவலம்! குழப்பத்தில் சென்னை -
பாஸ்போர்ட் ஆவணங்கள் அவசியம்.. சென்னை ஏர்போர்ட்டில் யாரிந்த நிழல் மனிதர்கள்.. அசிங்கப்பட்ட பெண்கள் -
பட்டா மாறுதல் செய்ய இதோ ஆன்லைனில் ஈஸி வழி? லோன் கிடைப்பதில் சிக்கல்? 24 மணி நேரத்தில் தீர்வு -
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி கட்டுமானங்களுக்கு தடை! பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வழக்கு! -
முடிவுக்கு வரும் 17 ஆண்டுகால காத்திருப்பு! இன்று வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் ரூட்டில் சோதனை -
சென்னை ஹைகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்! யார் இவர்? -
மாஃபியா கட்டுப்பாட்டில் சென்னை மெரினா கடற்கரை கடைகள்.. தூண்டிவிடுகிறார்களா? நீதிபதிகள் சந்தேகம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது?














Click it and Unblock the Notifications