Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மென்பொருள் தலைநகராகும் சென்னை.. சிறுசேரியில் பிரம்மாண்ட டேட்டா சென்டர் திறப்பு.. 4200 கோடி முதலீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சிறுசேரி வளாகத்தில் எஸ்டிடி ஜிடிசி இந்தியா நிறுவனம் தனது புதிய டேட்டா மையத்தைத் தொடங்கியுள்ளது. இது எஸ்டிடி ஜிடிசி இந்தியா நிறுவனம் தொடங்கிய நான்காவது டேட்டா சென்டர் ஆகும். அந்த மையத்தின் மொத்தத் திறன் 45 மெகாவாட் ஆகும் இதில் முதற்கட்டமாக 7.2 மெகாவாட் திறன் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனை காணொலி வாயிலாகத் திறந்து வைத்துள்ளார்.

இனி வரும் காலம் ஏஐ காலமாக இருக்க போகிறது என்பதை ஐடி நிறுவனங்கள் எல்லாம் உணர்ந்துவிட்டன. அதற்கு டேட்டா சென்டர்கள் தான் அவசியம். இலவமாக இந்தியாவில் பல்வேறு ஏஐக்கள் இயங்குவதற்கு தரவு தேவை என்பதற்காகத்தான்.. அப்படிப்பட்ட தரவுகளை சேமிக்க வேண்டியது, அதாவது டேட்டாக்களை சேகரிப்பது ஏஐக்களுக்கு அவசியம் ஆகும்.

STT GDC launches its 4th data center in Siruseri Chennai 4 200 crore agreement with Tamil Nadu government

ஏஐக்களுக்கு தரவு தான் உணவு

டேட்டா தான் இனி ஏஐக்களின் உயிர்நாடியாக, அதாவது உணவாக இருக்க போகிறது. ஆனால் ஏஐக்கள் சேகரிக்கும் தரவுகள் எல்லாம் சரியானதாக இருக்க வேண்டும் அல்லவா.. அதற்காக தரவு மையங்களை இந்தியாவின் முக்கியமான பல்வேறு மாநிலங்களை பிரபல ஏஐ நிறுவனங்கள் அமைக்கின்றன. அண்மையில் கூட கூகுள் நிறுவனம் அதானியுடன் இணைந்து ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில தரவு மையம் அமைக்க ஒப்பந்தம் செய்தது.

சென்னையில் 2 மணி நேர பயணம் வெறும் 15 நிமிடம்.. இந்தியாவில் முதல் ஏர் டாக்ஸி.. காரில் போற செலவு தான்
சென்னையில் 2 மணி நேர பயணம் வெறும் 15 நிமிடம்.. இந்தியாவில் முதல் ஏர் டாக்ஸி.. காரில் போற செலவு தான்

4200 கோடி முதலீடு

இந்நிலையில் எஸ்டிடி ஜிடிசி இந்தியா நிறுவனம் தரவு மையக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காகத் தமிழக அரசுடன் அந்நிறுவனம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் ₹4,200 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதற்காக சிறுசேரி வளாகத்திலேயே STT Chennai 4 என்ற மற்றொரு மையத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்த ஒரு வளாகத்தில் மட்டுமே சுமார் 130 மெகாவாட் வரை தரவுகளைக் கையாளும் வசதி உருவாக போகிறது.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி.. இனி ஒருபோதும் சாத்தியமில்லை.. மக்கள் அறிய வேண்டிய விவரம்
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி.. இனி ஒருபோதும் சாத்தியமில்லை.. மக்கள் அறிய வேண்டிய விவரம்

ஏன் இது முக்கியம்

எஸ்டிடி ஜிடிசி இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிமல் கண்டேல்வால் கூறுகையில் "இந்தத் தொடக்கம் எங்கள் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல். சென்னையின் வளர்ச்சிக்கான எங்களது நீண்டகால உறுதிப்பாட்டை இது காட்டுகிறது," என்றார். தமிழ்நாடு தவிர, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களுடன் இணைந்து ஏஐ-க்கு ஏற்ற தரவு மையங்களை உருவாக்கவும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது

எஸ்டிடி நிறுவனம் இப்போது என்ன செய்கிறது

தற்போது இந்தியாவில் 10 நகரங்களில் மொத்தம் 30 தரவு மையங்களை எஸ்டிடி நிறுவனம் இயக்கி வருகிறது. இதன் மொத்தத் திறன் 400 மெகாவாட்டிற்கும் அதிகம். ஆகும். சென்னை சிறுசேரி இப்போது இந்தியாவின் மிக முக்கியமான தரவு மையங்களின் மையமாக மாறி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+