ஆனி மாத ராசி பலன் 2023: சூரிய பெயர்ச்சியால் அற்புத யோகம்..4 ராசிக்காரர்கள் என்ஜாய்!
சென்னை: நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது என்ற கருத்தும் வழக்கில் உள்ளது. ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆனி மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: அரச கிரகமான சூரியன் மூன்றாமிடத்தில் பயணம் செய்யும் இந்த காலத்தில் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும் வியாபாரம் விருத்தியாகும். உங்கள் பேச்சில் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும் பேச்சிலேயே பலரையும் கவர்வீர்கள். உங்களின் தகவல் தொடர்பு நிலை சீரடையும். இந்த மாதத்தில் புது வண்டி வாகன யோகம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி தேடி வரும். தொட்டது துலங்கும் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் யாவும் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். உடலில் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். பண விசயத்தில் நண்பர்கள், வாழ்க்கை துணையின் உதவி கிடைக்கும்
ரிஷபம்: வேலையில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் சம்பள உயர்வு கிடைக்கும். பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். இளைய உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும். ஆலய தரிசனத்திற்காக வெளியூர் செல்வீர்கள். பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும். உங்களின் புத்தி கூர்மை அதிகரிக்கும் சமயோசிதமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். தொழில் உத்தியோகம் சிறப்படையும் எடுக்கும் காரியங்களெல்லாம் வெற்றியடையும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் பணிகளுக்கு நன்கொடை கொடுப்பீர்கள். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்: வேலையில் தலைமைப் பதவி கிடைக்கும் படிப்பு விசயத்தில் அப்பாவின் உதவி கிடைக்கும். வீடு மனை வாகனம் வகையில் பண வரவு அதிகரிக்கும். பேச்சில் இனிமை அதிகரிக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். சில வாரங்களுக்கு ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். முன்னோர்கள் சொத்திலிருந்து பண வரவு அதிகரிக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் பண வரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளும் அதிகரிக்கும். குடும்பத்தோடு உல்லாசப் பயணம் செல்வீர்கள்.
கடகம்: தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் அதிகரிக்கும். வெளிநாடு தொழில் தொடர்புகள் மூலம் பணவரவு அதிகரிக்கும். கூர்மையான பொருட்கள் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்கவும். சுக்கிரனால் உங்களின் முக வசீகரம் அதிகரிக்கும் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் தொழில் நிமித்தமாக வெளியூர் செல்வீர்கள். தொழில் உத்தியோகம் சிறப்படையும். அஷ்டமத்து சனியால் உங்களின் உடல் உழைப்பு அதிகரிக்கும். பண வரவு வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் ஸ்தான ராகுவால் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும் சுக ஸ்தான கேதுவினால் புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications