ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: கடக ராசிக்காரர்களுக்கு கவலைகள் தீரும் காலம்
ஆகஸ்ட் மாதம் கடக ராசிக்காரர்களுக்கு கவலைகள் தீரப்போகிறது. முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும் மாதமாக அமைந்துள்ளது.
சென்னை: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களுக்கு தனவரவும், சந்தோஷமும் அதிகரிக்கும் மாதமாக அமைந்துள்ளது. சந்திரன் பத்தாம் வீட்டில் அமர்ந்து இருக்கும் போது மாதம் தொடங்குகிறது. ராசிக்குள் சூரியன்,புதன், இரண்டாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் கேது ஏழாம் வீட்டில் சனி எட்டாம் வீட்டில் குரு, லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் பயணம் செய்வதால் மன கவலைகள் நீங்கி நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதமாக உள்ளது.
இந்த மாதம் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். வளர்ச்சியும் முன்னேற்றமும் வேகமாக இருக்கும். தெளிவும் உற்சாகமும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். மாத பிற்பகுதிகளில் சூரியன், சுக்கிரன், புதன் இடப்பெயர்ச்சியும் சாதகமான நிலையில் உள்ளதால் முன்னேற்றமுத் முயற்சிகளுக்கு வெற்றியும் கிடைக்கும்.
அப்பாவின் உதவியால் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பெண்கள் கோபமான வார்த்தைகளை கட்டுப்படுத்தவும். வேலை மாற்றம் தொடர்பான செய்திகள் தேடி வரும்.

லாபம் அதிகரிக்கும்
இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. சந்திராஷ்டம நாட்கள் தவிர ராசிநாதன் சந்திரன் பயணத்தால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தகவல் தொடர்பில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாலும். சிறந்த நன்மைகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கமிஷன் தொழில் பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். மிகச்சிறந்த முன்னேற்றங்கள் ஏற்படும்.

உற்சாகமான மாதம்
செவ்வாய் பகவான் குடும்ப வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். காதல் வாழ்க்கையில் கவலைகள் நீங்கி உற்சாகம் அதிகரிக்கும். மனைவி வழியில் வருமானம் அதிகரிக்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். வண்டி வாகனம் தொடர்பான செலவுகள் வரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வது அவசியம்.

வேலையில் முன்னேற்றம்
சூரியன் சொந்த வீட்டில் இருந்து மாத பிற்பகுதியில் வாக்கு ஸ்தானத்திற்கு மாறும் போது பண வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். அஷ்டம குருவினால் இந்த மாதம் சில பாதிப்புகள் வந்தாலும் பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லை. சனியால் சங்கடங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். செவ்வாய் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மாத பிற்பகுதிகளில் வெற்றிகள் தேடி வரும்.

காதல் வாழ்க்கை
சுக்கிரன் மாத பிற்பகுதியில் நீச்சமடையும் போது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதல் திருமண பேச்சுவார்த்தைகளில் சில தடைகள் வந்தாலும் பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் தொடர்பாக நல்ல செய்திகள் தேடி வரும்.

சிவ தரிசனம் செய்யவும்
சொத்து வீடு வாங்கும் விசயமாக பேசலாம். பணம் கொடுக்கல் வாங்கல் விசயமாக சில பிரச்சினைகள் வரலாம். ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீர்கள். உடற்பயிற்சி செய்வது அவசியம். தூக்க குறைபாடு வரலாம் தியானம் செய்வதன் மூலம் மனம் அமைதியடையும். திங்கட்கிழமை சிவபெருமானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.
-
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
ஆனி மாதத்தில் மிதுன ராசிக்கு ராஜயோகம்.. தொழில், பணவரவில் அதிரடி முன்னேற்றம்! -
ஆனி மாத பலன்: அடித்தாடும் ரிஷப ராசி.. குரு, சனியில் அருளால் பண மூட்டையை அள்ளும் யோகம் -
பத்ர ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. இந்த 5 விஷயம் உங்களுக்கு கண்டிப்பா நடக்கும் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications