சின்னக்கண்ணன் அழைக்கிறான்.. ஒன் இந்தியா வாசகர்களின் வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ளன. வீடுகளை அலங்கரித்து பாத கோலங்கள் வரைந்து வீட்டிற்கு வரும் கண்ணனை வரவேற்று வருகின்றனர். நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர்களின் வீடுகளில் கிருஷ்ணனும் ராதைகளும் உலா வருவதை பார்த்து ரசிக்கலாம்.
கண்ணனை எல்லோருக்குமே பிடிக்கும். கண்ணனின் குறும்புகளை அனைவருமே ரசிப்பார்கள். ஆயர்பாடியில் நண்பர்களுடன் சேர்ந்து வெண்ணெய் திருடுவான், பானைகளை உடைப்பான், கோபியர்களின் ஜடைகளை முடிபோட்டு இழுத்து ரசிப்பான் கண்ணன். மாய கண்ணனின் குறும்புகளை சொல்லிக்கொண்டே செல்லலாம்.
கண்ணனின் பிறப்பே அசுர வதத்திற்காகத்தான் என்றாலும் அவனது லீலைகள் அற்புதமானவை. சாபவிமோசனம் அளிப்பது, நண்பனுக்கு உதவி செய்வது, எளியவர்களுக்கு தேவையானவற்றை கொடுப்பது என கிருஷ்ணன் தனது பக்தர்களுக்கு எத்தனையோ நன்மைகளை செய்திருக்கிறார்.
கிருஷ்ண ஜெயந்தி தினமான இன்று வீடுகளில் வெண்ணெய், முறுக்கு,சீடை, அதிரசம் போன்றவைகளை படைத்து கண்ணனை அழைத்து வருகின்றனர். கண்ணன் இருக்கும் இடத்தில் ராதை இல்லாமலா? நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர்களின் வீடுகளில் உலா வரும் கண்ணன் ராதையை பார்த்து ரசியுங்கள்.
நிஷாந்திகா, வயது 4, மதுரை, அப்பா பெயர் வி. ராஜபாண்டி, அம்மா பெயர் ஆர்.சுப்புலட்சுமி

பவானி , எல்.கே.ஜி, திவ்யபாலா

பிரணவ், பிரகதி

ரோகித் ராஜ், வயது 3

ருத்ரா ஸ்ரீ, வயது 2

எம். வேத விக்னா













Click it and Unblock the Notifications