மகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய தடை - வெறிச்சோடிய புனித நீர் நிலைகள்
மகாளய அமாவசையை முன்னிட்டு இன்று முக்கடல் சங்கமம் கன்னியாகுமரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் சடங்குகள் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தர்பணம் செய்ய வந்தவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப
கன்னியாகுமரி: பாபநாசம் தாமிரபரணி ஆறு, கன்னியாகுமரி கடற்கரையில் குளிக்கவும், தர்ப்பணம் கொடுக்கவும் தடை உள்ளதால் தடையை மீறி தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். அமாவாசை நாட்களில் மக்கள் கூட்டமாக காணப்படும் குமரி கடற்கரை, தாமிரபரணி பாபநாசம் படித்துறை கொரோனா தடை காலமாக இருப்பதால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் தர்ப்பணம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளதால் இன்று காலையில் கடற்கரைக்கு தர்பணம் செய்ய வந்தவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை இன்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் பாரம்பரிய முறைகளை கடைபிடிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் சடங்குகள் பொது மக்கள் செய்தனர்.
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசையில் புனித நீர் நிலைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடுவார்கள். இந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் பொதுமக்கள் அதிகம் பேர் கூட தடை உள்ளது.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் தர்ப்பணம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளதால் இன்று காலையில் கடற்கரைக்கு தர்பணம் செய்ய வந்தவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை இன்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தாமிரபரணியில் குளிக்க தடை
பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடுவதற்கும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. வெளியூர்களில் இருந்து பாபநாசம் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க வந்த பொதுமக்கள் பலரை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். பாபநாசம் கோவிலுக்கு மட்டும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவில் முன்பாக விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, ஆற்றுப்படித்துறைக்கு பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். கடந்த ஒரு வார காலமாக பாபநாசத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் நேற்று கோவில் ஆற்றுப்படித்துறை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications