திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்குவதை முன்னிட்டு இன்று மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. புற்று மண் சேகரித்து, சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது.
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலி நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி, 18ஆம் தேதி வரை 9 நாட்கள் வெகுவிமரிசையாக நடக்கிறது. அதனை முன்னிட்டு இன்று மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 13ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவ விழா

இன்றைய தினம் அங்குரார்ப்பணத்தையொட்டி வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
நாளை முதல் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள்:
10ஆம் தேதி இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி தனது தேவியர்களுடன் வீதி உலா வருகிறார். 11ஆம் தேதி காலை 9 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதி உலா. ஆதிஷேசன் விஷ்ணுவின் வாகனம் என்பதால் முதலில் சேஷ வாகனத்தில் வீதி உலா வருகிறார் பெருமாள்.
11ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் வீதி உலா வரும் மலையப்பசுவாமி, 12ஆம் தேதி காலை 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் உலா வருகிறார். இரவு 7 மணிக்கு முத்துப் பந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
13ஆம் தேதி காலை 9 மணிக்கு கற்பக விருட்ச வாகன வீதி உலா, இரவு 9மணிக்கு சர்வ பூபால வாகனத்தில் உலா வருகிறார். 14ஆம் தேதி காலை 9 மணிக்கு மோகினி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு பெரிய திருவடி எனப்படும் கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளிலும் உலா வருகிறார்.
15ஆம் தேதி காலை 9 மணிக்கு சிறிய திருவடி என போற்றப்படும் அனுமன் வாகனத்தில் வீதி உலா வருகிறார். அன்றைய தினம் மாலை 5 மணியளவில் தங்கத் தேரோட்டமும் இரவு யானை வாகன வீதிஉலாவும் நடைபெறுகிறது.
16 ஆம் தேதி காலை சூர்ய பிரபை வாகன வீதி உலா, இரவு7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா நடைபெறுகிறது. 17ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டமும் இரவு7 மணிக்கு குதிரை வாகன வீதி உலாவும் நடைபெறுகிறது.
18ஆம் தேதி காலை 7 மணிக்கு சக்கர ஸ்நானம் நிகழ்கிறது. இரவு 7 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications