ஆடிப்பெருக்கு: காவிரி தங்கைக்கு சீர் கொடுக்கும் ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள்
ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளன்று பாய்ந்தோடும் காவிரியை தங்கையாக பாவித்து சீர் கொடுக்கிறார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்.
Recommended Video

திருச்சி: உடன் பிறந்த அக்காள், தங்கைகளுக்கு நல்ல நாளில் மங்கல பொருட்களை பரிசாக கொடுப்பது மகிழ்ச்சியான விசயம். ஆடி பதினெட்டாம் பெருக்கு கொண்டாடப்படும் இந்த நன்னாளில் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ரங்கநாதர், அம்மாமண்டபத்திற்கு எழுந்தருளி காவிரியை தங்கையாக பாவித்து சீர் கொடுப்பது சிறப்பு.
பொங்கி பாயும் காவிரி தங்கைக்கு ஆடிப்பெருக்கின்போது ஸ்ரீரங்கம் பெருமாளே சீர் கொடுக்கின்ற காரணத்தால், பெரும்பாலானோர் தங்கள் உடன் பிறந்த சகோதரிகளுக்கும் சீர் கொடுக்கின்ற வழக்கம் ஏற்பட்டது.
திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சகோதரிகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து, சீர் வழங்குகின்ற வழக்கம் இன்றைக்கும் இருந்து வருகிறது.

காவிரியும் கொள்ளிடமும்
ஸ்ரீரங்கம் என்பது ஒரு தீவு. காவிரியும் அதன் உப நதியான கொள்ளிடமும் ஸ்ரீரங்கத்தை மலர் மாலை போல் சூழ்ந்து வணங்குவதைப் போல உள்ளது. மகாவிஷ்ணுவுக்குத் தங்கை முறை காவிரி. பார்வதி தேவி தங்கை என்றால், அவள் வடிவான காவிரியும் தங்கைதானே!

மாலையாக வணங்கும் காவிரி
தன் அண்ணனை வணங்கும் விதமாக ஸ்ரீரங்கத்தை ஒரு மலர் மாலை போல் அணிவித்து மகிழ்கிறாளாம் காவிரி.தங்கையான காவிரியே தன்னை மலர்மாலை போல் சூழ்ந்து வணங்கிக் கொண்டிருக்கிற காரணத்தால் அண்ணனான ரங்கநாதருக்கும் காவிரியின் மேல் அதீத பாசம்.

தங்கைக்கு பரிசு
தங்கையான காவிரிக்கு பாசமாக பரிசளிப்பார் ஸ்ரீரங்கநாதர். ஆடிப்பெருக்கு நாளன்று மங்கல பொருட்களை பரிசாக கொடுப்பார்.
ரங்கநாதர் ஆலயத்தின் பிரதான உத்ஸவரான நம்பெருமாள் சீர்வரிசைப் பொருட்களுடன் புறப்பட்டு அம்மா மண்டபப் படித்துறைக்கு இன்று எழுந்தருளினார். தன் தங்கையான காவிரியைப் பார்த்தபடி நம்பெருமாள் மாலை வரை அதே இடத்திலேயே நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் அப்போது காவிரிப் படித்துறையில் நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

சீர்வரிசைப் பொருட்கள்
ஆடிப்பெருக்கு கொண்டாட வரும் பக்தர்கள் அனைவரும் இன்று அண்ணனையும், தங்கையையும் வணங்கி மகிழ்வார்கள். திருமஞ்சனம் முடிந்த பின்னர் யானை மேல் வைத்து எடுத்து வரப்பட்ட சீர்வரிசைப் பொருட்களை மாலை வேளையில் காவிரிக்கு அர்ப்பணம் செய்வார் ஸ்ரீரங்கநாதர். ஆண்டுதோறும் இந்த சடங்கு சம்பிரதாயமாக நடைபெறும் என்றாலும் இன்றைய தினம் மகிழ்ச்சியோடு பாய்ந்தோடி வரும் காவிரியைக் கண்டு மக்கள் உற்சாகமாக ஆடிப்பெருக்கு கொண்டாடி வருகின்றனர்.

பட்டுப்புடவை பரிசு
தாலிப்பொட்டு, தான் அணிந்து கொண்ட பட்டு வஸ்திரம், தான் சூடிக்களைந்த மாலை, சந்தனம், குங்குமம், தாம்பூலம், புஷ்பம், பழங்கள் போன்றவை. பெருமாளுக்கு முன் இவை அனைத்தும் வைத்து வழிபாடு செய்யப்பட்ட பின்னர் காவிரியில் சேர்த்து விடுவார்கள் பட்டாச்சார்யார்கள். இப்படி சீர்வரிசைப் பொருட்களை அர்ப்பணிக்கின்ற வேளையில் கூடி இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் காவிரியை வணங்கி, ‘ரங்கா... ரங்கா' கோஷத்தை எழுப்புவார்கள். இதேபோல பல சகோதரர்கள் இன்றைக்கும்
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications