கிருஷ்ண ஜெயந்தி.. வீடுகள் தோறும் உலா வரும் கண்ணன்கள்.. கூடவே ராதைகளும்.. உற்சாக கொண்டாட்டம்!
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் வீடுகள் தோறும் கண்ணன்கள் கைகளில் புல்லாங்குழல்களுடன் உலா வரத் தொடங்கி விட்டனர். கைகளில் பானைகளும் கூடவே ராதைகளும் உலா வருவதைக்காண கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் பகவான் நாமத்தை உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவார்கள் என்பது ஐதீகம். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நாளில் வீடுகளில் அலங்கரித்து கண்ணனை வரவேற்போம். பாத கோலமிட்டு பலகாரங்களை வைத்து கண்ணனை வணங்குவோம். நம் வீட்டு குழந்தைகளுக்கு கண்ணன் வேடமிட்டும் பெண்குழந்தைகள் என்றால் ராதை வேடமிட்டும் உற்சாகமாக கொண்டாடுவோம்.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. உங்கள் வீட்டு கண்ணனின், ராதையின் புகைப்படங்களை அனுப்ப கூறிய அடுத்த நொடியில் இருந்தே எங்களின் மெயில் இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறது. ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் தங்களின் அன்பினால் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். நாங்களும் உங்கள் வீட்டு பிள்ளைகளின் பெருமையை தினம் தினம் உலகறியச் செய்து வருகின்றோம்.
கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் என பல பெயர்கள் உண்டு. கிருஷ்ண பிறந்ததில் இருந்து தன்னுடைய பால பருவத்தில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடுகின்றனர்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார். இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் கண்ணனை நினைத்து வணங்குவோம். கண்ணனை நினைத்தாலே கவலைகள் பறந்தோடும்.

அபினவ்

விஷ்மிதா

குலோதுங்கன் தந்தை பெயர் அருண்

ஒய். சாதனா யாதவ்

எஸ். கிரிஸ்வரன், கடலூர்

ச.பெ. சிபு, மதுரை

தன்விகா ஸ்ரீ

நிவேதா

பி. ஜனனி

ரக்ஷ்சனா

ராதை

லக்ஷனா

ஹரி சிவன்












Click it and Unblock the Notifications