ராகு பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு நல்ல யோகம் காத்திருக்கு மக்களே!
சென்னை: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக அறியப்படும் ராகு பகவான், தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ஆண்டு மே மாதத்தில் வக்கிரநிலையிலே கும்ப ராசிக்கு நுழைய உள்ளார். இது சனி பகவானின் சொந்தமான ராசி என்பதாலும், இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் பிரதிபலிக்கும் என ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர 18 மாதங்கள் எடுத்துக்கொள்கிறார். சனி பகவானுக்குப் பிறகு மெதுவாக நகரும் கிரகமாகவும், சொந்த ராசி இல்லாதவனாகவும் ராகு அறியப்படுகிறார்.

இந்த முறை ராகுவின் கும்ப ராசி பயணம், குறிப்பாக துலாம், சிம்மம், மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
துலாம் ராசி
இருந்த ராசியில் ஐந்தாவது வீட்டில் ராகு பயணிக்க இருப்பதால், அறிவாற்றல் மற்றும் நினைவு சக்தி மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் பெரும் முன்னேற்றம், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, பங்குசந்தை முதலீடுகளில் லாபம், தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி என பல நல்ல பலன்கள் காத்திருக்கின்றன.
சிம்ம ராசி
ஏழாவது வீட்டில் ராகு நுழைவதால், வெளிநாட்டு வாய்ப்புகள், நிதி நன்மைகள், திட்டங்களில் வெற்றி, பணியிட முன்னேற்றம் ஆகியவை ஏற்படும். ஆனால், வேலை செய்யும் இடத்தில் கவனமுடன் இருப்பது அவசியம்.
கன்னி ராசி
ஆறாவது வீட்டில் ராகு பயணிப்பதால், நீண்ட காலமாக நிறைவடையாமல் இருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் பயண வாய்ப்பு, உயர் அதிகாரிகளின் ஆதரவு, பதவி உயர்வு மற்றும் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மே மாதத்தில் நடைபெற உள்ள ராகு பகவானின் இந்த இயக்கம், உங்கள் ராசிக்குத் திருப்புமுனையாக இருக்குமா என்பதை தெரிந்துகொள்ள, தினசரி ராசிபலன்களை தொடர்ந்து வாசியுங்கள். மேலும் ஜோதிட செய்திகளை உடனுக்குடன் பெற, Oneindia தமிழ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!












Click it and Unblock the Notifications