சனி துரத்துனா விடாது.. ரிஷப ராசிக்கு சனி வக்கிர பெயர்ச்சி எப்படி இருக்கும் தெரியுமா? ரொம்ப முக்கியம்
சென்னை: அடுத்த மாதம் நடக்க உள்ள சனி வக்கிர பெயர்ச்சி ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் குரு பெயர்ச்சி நடந்தது. இந்த குரு பெயர்ச்சியின் சுவடு மறையும் முன் சனிப்பெயர்ச்சி நடக்க உள்ளது. சனி பகவான் அடிக்கடி இடம் மாற கூடியவர் அல்ல. ஒவ்வொரு ராசியிலும் நீண்ட காலம் அதாவது இரண்டரை ஆண்டு காலம் இருக்கும் குணம் கொண்டவர் சனி பகவான்.

ஆனால் இப்போது செய்வது அவர் மேற்கொள்ளும் வக்கிர பெயர்ச்சி. வக்கிர பெயர்ச்சி என்றால்.. ஒரு ராசிக்கு உள்ளேயே நட்சத்திரங்களுக்கு இடையே பின்னோக்கி செல்வது. ஒரு ராசியில் இருக்கிறார் என்றால் அந்த ராசிக்கு மட்டும் மெல்ல 12 ராசிகளுக்கும் நல்ல பலன்களையும் கெடு பலன்களையும் கொடுக்க கூடியவர்.
அதோடு அவ்வப்போது முன்பும், பின்னும் நகர்ந்து பலன்களை மாற்றுவார். சில சமயங்களில் ராசி ரீதியாக மாறாமல் நட்சத்திர ரீதியாக முன்னும் பின்னும் நகருவார். இப்படி சனி பின்னோக்கி நகர்வதை வக்ர பெயர்ச்சி என்று கூறுவார்கள். தற்போது கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி இருக்கிறார்.
இவர்தான் இந்த முறை வக்கிர பெயர்ச்சி அடைய போகிறார். சரி எந்த இடத்திற்குவக்கிர பெயர்ச்சி அடைகிறார் என்று தெரியுமா?
கும்பத்தில் சனி பின்னோக்கி சதய நட்சத்திற்கு செல்கிறார். அதனால் இது வக்கிர பெயர்ச்சி. ஜூன் 30-ம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைகிறார் சனி பகவான். அதன்பின் அக்டோபர் 5ம் தேதி மேலும் பின்நோக்கி சென்று அவிட்டம் நட்சத்திரத்தை அடைகிறார்.
ரிஷப ராசிக்கான பலன்; இதில் அடுத்த மாதம் நடக்க உள்ள சனி வக்கிர பெயர்ச்சி ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு பணத்தை கொடுக்கும். அடுத்த 1 வருடம் உங்களுக்கு பண கஷ்டம் இருக்காது. பொருளாதார ரீதியாக நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். கடன்களை அடைக்க முடியும்.
ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும். வயிற்று பிரச்சனை வரும். சிறுநீரக பிரச்சனை வரும். கிட்னி பாதிக்கும் ஆபத்துகள் உள்ளன.
சனி தொடர்ந்தால் விடாது என்பார்கள். அந்த வகையில் உங்களுக்கு வாகன ஓட்டத்தில் சனி உள்ளது. எனவே கவனமாக வண்டி வாகனம் ஓட்டவும். தப்பி தவறி கூட வேகமாக செல்ல வேண்டாம். பெரிய விபத்துகள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.
சனி மூலம் உங்களுக்கு திருமண வாய்ப்புகள் கிடைக்கும். பல நாட்களாக நடக்காமல் இருந்த திருமணம் கைகூடும் வாய்ப்புகள் உள்ளன. நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உங்கள் வேலையில் நல்ல கவனத்துடன் இருக்கவும். இல்லையென்றால் வேலை போகும் ஆபத்தும் உள்ளது. சில சொத்து விஷயங்களில் ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications