Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநாங்கூர் 11 திருப்பதிகள் பதினோரு கருட சேவை விழா - கண் குளிர தரிசித்த பக்தர்கள்

திருநாங்கூர் திவ்யதேச கோயிலில் நடைபெற்ற 11 தங்க கருடசேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: திருநாங்கூர் திவ்யதேச கோயிலில் நடைபெற்ற 11 தங்க கருடசேவை உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவரும் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களைப் பாடி வழிபட்டனர்.

பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதிகம். நாக தோஷம் நீங்கும். கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.

ஒரு கருட சேவை என்றாலே சிறப்பு அதுவும் 11 கருட வாகனங்களில் எழுந்தரும் 11 பெருமாளையும் காண இரண்டு கண்கள் போதாது.

திருநாங்கூர் 11 திவ்ய தேசங்கள்

திருநாங்கூர் 11 திவ்ய தேசங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் 108 வைணவ திவ்யதேசங்களான நாங்கூர் மணிமாடக்கோயில் ஸ்ரீ நாராயண பெருமாள், அரிமேய வின்னகரம் ஸ்ரீ குடமாடு கூத்தர், ஸ்ரீ செம்பொன்னரங்கர், ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீ வண்புருடோத்தம பெருமாள், ஸ்ரீ வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள், திரு மேணிக்கூடம் ஸ்ரீவரதராஜ பெருமாள், கீழச்சாலை ஸ்ரீமாதவப்பெருமாள், பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன்' ஆகிய 11 திவ்யதேச கோயில்கள் அமைந்துள்ளன.

கருடசேவை உற்சவம்

கருடசேவை உற்சவம்

இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் உலக பிரசித்தி பெற்ற 11தங்க கருடசேவை உத்ஸவம் நடைபெருவது வழக்கம். இந்த ஆண்டு கருட சேவை உத்ஸவம் நேற்றிரவு நடைபெற்றது. கருடசேவையை முன்னிட்டு முதல் நாள் அன்று திருநகரி ஸ்ரீ கல்யாணரெங்கநாதர் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு, 11 திவ்ய தேசங்களுக்கு சென்று கருடசேவைக்கு வருமாறு பெருமாள்களை அழைத்தார்.

 11 பெருமாள்கள் தரிசனம்

11 பெருமாள்கள் தரிசனம்

அவரது அழைப்பை ஏற்று 11 பெருமாள்களும், தங்களது கோயில்களில் இருந்து புறப்பட்டு, நாங்கூர் மணிமாடக்கோயிலில் நேற்று மாலை எழுந்தருளினர். அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 11 பெருமாள்களும் கோயில் மண்டபத்தில் எழுந்தருள, சிறப்பு திருமஞ்சணம் நடைபெற்றது.

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்

தொடர்ந்து நேற்று அதிகாலை மணிக்கு மணிமாடக் கோயில், ராஜகோபுர வாயிலில் மணவாள மாமுணிகளும், ஹம்ஸவாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒருவராக தங்க கருடவாகனத்தில் எழுந்தருள, அவர்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்று.

 தங்க கருட சேவை உற்சவம்

தங்க கருட சேவை உற்சவம்

கும்ப தீப ஆரத்தி எடுக்கப்பட்டு தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களைப் பாடினர். தொடர்ந்து 11 மணிக்கு பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலாகாட்சி நடைபெற்றது. கருட சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர். விழாவை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

யார் இந்த திருமங்கையாழ்வார்

யார் இந்த திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் 'கலியன்' ஆகும். ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் திருமங்கை நாட்டின் மன்னனாக்கினான். அன்று முதல் இவர் திருமங்கை மன்னன் என அழைக்கப்பட்டார்.

திருமால் மீது பக்தி

திருமால் மீது பக்தி

குமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் வைணவ சமயத்தை அனுசரிக்க ஆரம்பித்தவர், அவளின் விருப்பத்தின்படி திருமால் அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்துவரலானார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும், அரசு செல்வங்களையும் இழந்தார்.

ஆட்கொண்ட பெருமாள்

ஆட்கொண்ட பெருமாள்

கடமையை நிறைவேற்ற யாசகமும் கைக்கொடுக்காதப்படியால் களவாடியாவது அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருவரங்கத் திருக்கோயிலின் கைங்கரியங்களையும் செய்துவந்தார். இச்செயலை மெச்சி, இறைவனே இவர் களவாடும் பாதையில் வந்து, இவரை ஆட்கொண்டதோடு வேண்டிய செல்வங்களையும் கொடுத்தருளினார்.

 திருநாங்கூர் சென்று வாருங்கள்

திருநாங்கூர் சென்று வாருங்கள்

ஆழ்வார், பெருமாள்களின் அழகைக் கண்டு தங்களுக்கும் திருநாங்கூர் செல்ல வேண்டும் என்று ஆவல் எழுகின்றதா? அடுத்த தை அமாவாசை வரை காத்திருக்க வேண்டாம். நேரம் கிடைக்கும் போது திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுக்கும் சென்று தரிசனம் செய்து வாருங்கள். பெருமாளை தரிசனம் செய்தாலே துன்பங்கள் நீங்கி பேரின்பம் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+