Viruchigam: மே மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிரடி மாற்றங்கள்.. என்ன பலன்?
மே மாத பலன்கள் 2026: விருச்சிகம் ராசியினருக்கு மே மாதத்தில் என்ன விதமான நல்ல பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மே மாதத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் முக்கியமான பெயர்ச்சிகளை சந்திக்கின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் ரிஷப ராசியில் செவ்வாய், புதன், சூரியன் ஆகியவை ஒன்றாக கூடும் நிலை உருவாகிறது. அதனைத் தொடர்ந்து மாதத்தின் பிற்பகுதியில் ரிஷபத்தில் புதன் மற்றும் சூரியன் இணையும் சேர்க்கையும் நடைபெறுகிறது.

இந்த கிரக அமைப்புகள் 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில், விருச்சிகம் ராசியினரின் தொழில், வருமானம், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வெற்றிகளைக் குவிக்கும் காலகட்டமாக இருக்கும். பணம் ஏன் வருகிறது, எங்கிருந்து வருகிறது என்பது தெரியாத அளவுக்கு திடீர் பணவரவுகள், திடீர் அதிர்ஷ்டங்கள் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும. இதுவரை வராமல் இருந்த பணங்கள் எல்லாம் வந்து சேரும். வண்டி, வாகனங்கள் புதிதாக வாங்கி மகிழ்வீர்கள்.
குடும்பம்
காப்பீடு மூலம் பணம் வராது, திடீர் பண வரவுகள், வாழ்க்கைத் துணையின் மூலமாகப் பண வரவுகள் உண்டாகும். அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். டிரெசரி, காது, மூக்கு, தொண்டை துறை, டென்டிஸ்ட் துறைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நான் சொல்வது தான் சரி என்று இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் சூழ்நிலை, தற்காலிகப் பிரிவு வருவதற்கான அமைப்பு உள்ளது.
யோகம்
ஆனாலும், சூரியன் புதன் பார்வை இருப்பதால் அற்புதமான வெற்றிகள், சந்தோஷம் ஏற்படும். புதிதாத லாப்டாப, மொபைல் ஃபோன், சிம்கார்டு போன்றவற்றை மாற்றக்கூடிய யோகம் உண்டாகும். வண்டி, வாகனங்கள் மாற்றக்கூடிய யோகம் உண்டு. நண்பர்களுக்கு பணம் கொடுத்து உதவக்கூடிய யோகம் உண்டு. ஆன்லைனில் பணம் வரும். அக்கவுண்டுக்கு பணம் வரும் யோகம் உண்டு.
மே 20
மே மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் நினைத்த காரியங்கள் நடக்கும். நல்ல விஷயங்கள் உங்களைத் தேடி தானாக வரும். வாழ்க்கையே மாற்றக்கூடிய சூழ்நிலை ஏற்படும். வாழ்க்கையை மாற்றக்கூடிய சூழல் ஏற்படும். கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்க அழைப்பார்கள். அற்புதமான யோகங்கள் பெறக்கூடிய நேரமாக இந்த மாதம் மே 20 ஆம் தேதிக்குப் பிறகு இருக்கும்.
வழிபாடு
தெய்வ அனுக்கிரகம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். நினைத்த காரியங்கள் நடக்கும் யோகம் உண்டாகும். சந்தோஷம் 90 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 100 சதவீதம் பெறக்கூடிய அமைப்பு. கபாலீஸ்வரரை மனதாரா வழிபாடு செய்வது உங்களுக்கு பரிபூரணமான ஏற்றத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications