மேஷ ராசிக்கு ஏழரை சனியால் உண்டாகும் யோகம்.. பணம் கொட்டும்.. ரேஞ்சே மாறப்போகுது
தமிழ் புத்தாண்டு: தமிழ் புத்தாண்டு தொடங்கியுள்ளது. மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளன. உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சனிப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கிடையே ஏப்ரல் 14 ஆம் தேதி விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசியினருக்கு 2 ஆம் இடத்தில் குடும்ப ஸ்தானத்தில் குரு இருக்கிறார். குடும்பத்தில் விருத்தி ஏற்படும். காசு, பணம் அதிகரிக்கும். மகிழ்ச்சி உண்டாகும். சமுதாயத்தில், குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பார்ப்பவர்களின் லட்சணங்கள் அதிகரிக்கும். இதெல்லாம் முதல் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே மூன்றாம் இடத்துக்கு குரு போகிறார். சனி ஏற்கனவே விரையத்தில் அமர்ந்திருக்கிறார்.
யோகம் கொட்டும்
ஏழரை சனி தொடங்கியுள்ளதால் அச்சப்படத் தேவையில்லை. இந்த காலகட்டத்தில் தான் திருமண யோகம் கைகூடி வரும். புதிய வேலைகளைத் தொடங்குவீர்கள். முக்கிமான இடமாற்றம், வெளியூரில் செட்டிலாகும் யோகம் உண்டாகும். விரைய ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதால் சுப விரையங்களை செய்ய வைப்பார். வீடு கட்டி கிரக பிரவேசம் செய்வீர்கள்.
பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் யோகமான காலகட்டமாக இருக்கும். அவர்களின் படிப்புக்கான செலவு செய்வீர்கள். நகை வாங்குவது, முதலீடு செய்வது போன்றவற்றை செய்யத் தொடங்குவீர்கள்.
ஆரோக்கியத்தில் கவனம்
ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கால் பாதம், கொழுப்பு தொடர்பான எச்சரிக்கைகளில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லாப ஸ்தானத்துக்கு வந்து ராகு அமருவதால் பெரிய பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். எதிரி யாராக இருந்தாலும் உங்களுக்கு நண்பர்களாக மாறுவார்கள்.
பஞ்சம ஸ்தானத்தில் கேது வருவதால் ஆன்மிகத்தின் நாட்டம் மிகவும் அதிகரிக்கும். குடும்பத்தில் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை, அக்கறை, கவலை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு ஹார்மோன் இம்பேலன்ஸ், சிலருக்கு மாதவிடாய் பிரச்சனை, மூத்தவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பாட்டி அல்லது தாத்தாவின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெற்றி
குருவின் மாற்றம் மிகப்பெரிய வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கும். மேஷத்துக்கு சனி பார்வை இல்லை என்பதே மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும். நிறைய நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கும். குரு 3 ஆம் இடத்துக்குச் செல்வதால் 3 ஆம் இடத்தில் இருந்து ஸ்தான பலத்தை கெடுப்பார். இளைய சகோதரன், சகோதரி வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான விஷயங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய ஆரோக்கியத்தில், நட்பு விஷயத்தில் கவனம் தேவை.
குரு பார்வை
குரு 3 ஆம் இடத்தில் இருப்பதால் மனதில் தேவையில்லாத குழப்பம், அழுத்தத்தை உண்டாக்கும். ஒரு புதிய நபரால் வாழ்க்கை உயரும். தெய்வ அனுக்கிரகம் பூரணமாகக் கிடைக்கும். கோவில் சம்பந்தப்பட்ட விஷயங்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் யோகம் உண்டாகும். வழக்குகள் சாதகமாக முடியும். வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். காசி, கயா, ராமேஸ்வரம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
லாபம்
லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் அபரிமிதமான பண வரவு உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பண வரவு அதிகரிப்பதால் மன மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
வழிபாடு
மதுரையில் இருக்கக்கூடிய திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோயிலுக்குச் சென்று வருவது நல்ல பலன்களைத் தரும். மேஷ ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தின் அடிப்படையில் 75 சதவீதமும், பொருளாதாரத்தின் அடிப்படையில் 80 சதவீதமும் நற்பலன்கள் கிடைக்கும்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications