Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெட்ரோல் நிலையங்களில்.. கார்டு யூஸ் பண்ணாதீங்க.. பல லட்சங்களை இழக்கும் அபாயம்.. கவனமாக இருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் உள்ள பல்வேறு பெட்ரோல் நிலையங்களில் புதிய விதமான மோசடி ஒன்று நடக்க தொடங்கி உள்ளது. இந்த மோசடி காரணமாக பல லட்சங்களை நீங்கள் இழக்கும் அபாயம் உள்ளது.

நீங்கள் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போடுகிறீர்கள் என்று வைத்துகொள்வோம். பலரும் இதற்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துவது உண்டு. முக்கியமாக சிலர்.. கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் பாயிண்ட்ஸ் கிடைக்கும் என்பதால் அதை அதிகம் பயன்படுத்துவது உண்டு. ஆனால் இதில்தான் சிக்கல் உள்ளது.

automobile petrol diesel fuel

சமீபத்தில் நபர் ஒருவர் டெல்லியில் பெட்ரோல் போட சென்றுள்ளார். காரில் பெட்ரோல் போட்ட பின்.. கிரெடிட் கார்டில் 1000 ரூபாய் எடுக்க கூறி உள்ளார். முதலில் கார்டு போட்டு password எல்லாம் போட்ட பின்பும் கார்டு decline ஆகி உள்ளது. பணமும் எடுக்கப்படவில்லை. இரண்டாவது முறையும் கார்டு போட்டு password எல்லாம் போட்ட பின்பும் கார்டு decline ஆகி உள்ளது. பணமும் எடுக்கப்படவில்லை. மூன்றாவது முறை அவர் கூகுள் பேவில் பணம் செலுத்துவிட்டு வந்துவிட்டார்.

ஒரு வாரத்திற்கு பின் ஷாக்

இதையடுத்து அவர் ஒரு வாரத்திற்கு பின் வீட்டில் இருக்கும் போது இரவில் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அவரின் 1.50 லட்சம் ரூபாய் பேலன்ஸ் உள்ள கிரெடிட் கார்டில் 50 ஆயிரம் எடுக்கப்பட்டு உள்ளது. சில நிமிடங்களில் மீண்டும் 40 ஆயிரம் எடுக்கப்பட்டு உள்ளது. அதன்பின் suspicious transaction என்று கூறி வங்கியே கார்டை ஹோல்டு செய்துள்ளது.

அதன்பின் அவர் சோதனை செய்ததில் பெட்ரோல் நிறுவனத்தில் இருந்து கார்டு கசிந்ததை கண்டுபிடித்துள்ளார். அங்கே அவர் முதலில் கார்டு போட்டு password எல்லாம் போட்ட பின்பும் கார்டு decline ஆகி உள்ளது. பணமும் எடுக்கப்படவில்லை. இரண்டாவது முறையும் கார்டு போட்டு password எல்லாம் போட்ட பின்பும் கார்டு decline ஆகி உள்ளது. பணமும் எடுக்கப்படவில்லை.

இந்த இரண்டு முறையும் பணம் போகாமல்.. கார்டு ரீடிங் செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஸ்கிம்மர் எந்திரங்கள் மூலம் அவரின் கார்டு விவரம் ரெக்கார்ட் செய்யப்பட்டு உள்ளது. அவரின் பாஸ்வேர்ட் ஊழியர் மூலம் நோட்டமிடப்பட்டு உள்ளது. இப்படி விவரங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு சில நாட்கள் கழித்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாடு

இந்தியாவில் கார்டு கொள்ளையடிக்கப்பட்டாலும் வெளிநாட்டிற்கு விவரம் அனுப்பப்பட்டு அங்கிருந்து பணம் திருடப்படுவதால் இதில் பெட்ரோல் பங்கை நேரடியாக குற்றம் சொல்லி கண்டுபிடிப்பது கடினம். இந்த மோசடிகள் தற்போது பெட்ரோல் பங்குகளில் அதிகம் ஆகி உள்ளதாம், இதை தடுக்க சில வழிகள் உள்ளன.

1. உங்கள் கார்டுகளை டேப் செய்து மட்டுமே பணம் செலுத்துவதும்.

2. ஒருமுறை கார்டு decline ஆகும் பட்சத்தில் ஏன் ஆகிறது என்பதை சோதனை செய்யுங்கள். அதற்கு மெசேஜ் வருகிறதா என்று பாருங்கள்.

3. கார்டு online லிமிட்டை வைத்தால் பணம் அதிக திருடப்படுவது நிறுத்தப்படலாம்.

4. இந்தியாவில் கார்டு கொள்ளையடிக்கப்பட்டாலும் வெளிநாட்டிற்கு விவரம் அனுப்பப்பட்டு அங்கிருந்து பணம் திருடப்படுவதால் உங்கள் கார்டுகளை வெளிநாட்டில் பயன்படுத்த முடியாத வண்ணம் லாக் செய்ய முடியும். அதை நெட் பேங்க்கிங்கில் செய்து விடுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+