கொங்கு மண்டலத்தையே.. மாற்ற போகும் பிரம்மாண்ட சாலை.. கவனிக்க வேண்டிய 7 சிறப்பம்சங்கள்! சிலிர்க்குதே
கோவை: கொங்கு மண்டலத்தையே மாற்றும் அளவிற்கு மிக முக்கியமான நெடுஞ்சாலை ஒன்று வெள்ளக்கோவில் அருகே அமைய உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை 3 கொங்கு மாவட்டங்களை மாற்ற போகிறது. NH81-A என்று அழைக்கப்படும் இந்த சாலை குறித்த 7 சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம்.
1. நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் வெள்ளக்கோவில்-சங்ககிரி NH81-A 70 கிமீ நான்கு வழிச்சாலை விரிவாக்கம் விரைவில் நடக்க உள்ளது.

2. 2,000 கோடி செலவில் வெள்ளக்கோவில்-சங்ககிரி NH81-A 70 கிமீ நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. இதில் முக்கியமாக 2,000 கோடி செலவில் வெள்ளகோவில் முதல் சங்ககிரி வரையிலான 70 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய NH381A இன் நான்கு வழிச்சாலை பற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில், சங்ககிரி, வெப்பத்தை, மொடக்குறிச்சி, ஈரோடு, விளக்கேத்தி, முத்தூர் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது.
3. சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு இந்த திட்டம் மிக முக்கியமானது ஆகும். இந்த திட்டத்திற்கான டெண்டர் மூன்று மாதங்களுக்குள் விடப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
4. இதனால் அங்கே 3 மணி நேரமாக உள்ள பயண நேரம் 2 மணி நேரம் அல்லது அதற்கும் கீழ் குறையும்.
5. அடுத்த வருடம் இறுதிக்குள் இந்த திட்டம் நிறைவுபெறும். தேசிய நெடுஞ்சாலை 381A, பொதுவாக NH 381A என அழைக்கப்படுகிறது, இது வெள்ளக்கோவில் NH-81 ஐ சங்ககிரி அருகே NH-544 ஐ ஈரோடு வழியாக செல்லும். சங்ககிரி அருகே NH-544 இல் முடிவடைவதற்கு முன், இந்த பாதை முத்தூர், கந்தஸ்மிபாளையம், விளக்கேத்தி (சிவகிரி), மொடக்குறிச்சி, ஈரோடு மற்றும் பள்ளிபாளையம் வழியாக செல்லும்.
6. இந்த சாலையில் 6 பாலங்கள், 3 உயர்மட்ட வழி சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
7. நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் வெள்ளக்கோவில்-சங்ககிரி NH81-A 70 கிமீ நான்கு வழிச்சாலை விரிவாக்கம் விரைவில் நடக்க உள்ளது. இது சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு இந்த திட்டம் மிக முக்கியமானது ஆகும். நீண்ட காலத்திற்கு பின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுவது அப்பகுதி மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் ₹1 லட்சம் கோடி மதிப்பீட்டில் 2,781 கி.மீ.க்கு மொத்தம் 71 வரவிருக்கும் திட்டங்கள் உள்ளன. பாஜக அரசு 2014 முதல் மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக 2 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. தற்போதைய திட்டங்களின் மதிப்பு ரூ.60,000 கோடி. முடிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு மொத்தம் ₹50,000 கோடி என்றும் அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டு உள்ளார்.
சாலை திட்டங்கள். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த வாரம் தஞ்சாவூருக்குச் சென்றபோது, தமிழகத்தில் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக ₹1 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். சோழபுரம்-தஞ்சாவூர் மற்றும் சேத்தியாத்தோப்பு-சோழபுரம் ஆகிய நான்கு வழிச்சாலையை ஆய்வு செய்தபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
4,730 கோடி செலவில் கட்டப்படும் 164 கிமீ விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் புறவழிச்சாலையில், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு வழி வகுக்கும். அடுத்த 3 மாதங்களில் இதன் பணிகள் நிறைவு அடையும் என்று உறுதி அளித்தார். இங்கே பணிகள் கடந்த 5 வருடமாக சரியாக நடக்கவில்லை. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மேற்கொண்ட ஆய்விற்கு பின் இங்கே நடக்கும் பணிகள் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக முடிக்கப்படாமல் இருந்த விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தை கடந்த வாரம் ஆய்வு செய்தது கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications