டோல் கட்டணத்தைத் தவிர்க்க.. இதை மட்டும் பண்ணாதீங்க.. மத்திய அரசின் வார்னிங்.. கவனம்!
டெல்லி: நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் செலுத்தாமல் தப்பிக்க நம்பர் பிளேட்டை மாற்றி மோசடி செய்பவர்கள் மீது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தீவிர நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. ஆள்மாறாட்டம் மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் FIR பதிவு செய்து கைது நடவடிக்கைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் முன்ட்கா பகுதியில் உள்ள UER-II சுங்கச்சாவடியில் இந்த அதிர்ச்சி மோசடி அம்பலமாகியுள்ளது. பல வாகன உரிமையாளர்களின் FASTag கணக்கில் இருந்து தொடர்ந்து பணம் கழிக்கப்பட்டது. ஆனால், பணம் கழிக்கப்பட்ட அதே நேரத்தில் அந்த வாகனங்கள் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த சம்பவம் பாதிக்கப்பட்டவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பாதிக்கப்பட்டவர்கள் NHAI-ன் தொழில்நுட்பப் பிரிவான Indian Highways Management Company Limited (IHMCL)-ஐ அணுகி புகார் அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தினர். வாகன் (Vahan) தரவுத்தளத்தை ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
மோசடி எப்படி நடந்தது?
சுங்கச்சாவடியைக் கடந்த சில வாகனங்களில் FASTag ஒட்டப்படவில்லை என்பது தெரியவந்தது. டோல் கட்டணத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வாகன உரிமையாளர்கள் தங்கள் நம்பர் பிளேட்டில் உள்ள எண்களை திட்டமிட்டு மாற்றியுள்ளனர். இந்த மாற்றப்பட்ட எண்கள், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பிற அப்பாவி வாகனங்களின் பதிவு எண்களுடன் பொருந்தியுள்ளன.
இதனால், தானியங்கி கேமராக்கள் போலி எண்களைப் படம் பிடித்து, அந்த எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்த அசல் வாகன உரிமையாளர்களின் FASTag கணக்கில் இருந்து பணத்தை தானாக கழித்தன. இது திட்டமிட்ட ஆள்மாறாட்ட மோசடியாகும்.
அதிகாரிகள் கேமரா பதிவுகளை வாகனத்தின் மாடல், நிறம், உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்போது கேமராவில் பதிவான வாகனமும், பதிவு எண்ணுக்கு சொந்தமான வாகனமும் வேறு என்பது உறுதியானது. சுங்கச்சாவடி சோதனையில் இருந்து தப்பி, போலீஸ் பின்தொடர்வதைத் தவிர்க்கவே இந்த நம்பர் பிளேட் மாற்றம் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
தடையற்ற சுங்க முறை எப்படி செயல்படுகிறது?
முன்ட்கா சுங்கச்சாவடியில் NHAI அறிமுகப்படுத்தியுள்ள Multi-Lane Free Flow (MLFF) முறையில் வாகனங்கள் வரிசையில் நிற்காமல் வேகமாகக் கடக்கலாம். மேலே பொருத்தப்பட்டுள்ள RFID ரீடர்கள் மற்றும் AI தொழில்நுட்பம் கொண்ட ANPR கேமராக்கள் வாகன எண்களைத் துல்லியமாகப் படித்து FASTag வாலட்டில் இருந்து தானாக பணம் கழிக்கின்றன.
இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை மோசடியாளர்கள் தங்கள் சாதகத்திற்கு பயன்படுத்த முயன்றுள்ளனர். எனினும், AI கேமராக்களின் துல்லியத்தால் மோசடி எளிதில் கண்டுபிடிக்கப்பட்டது.
NHAI ஏற்கெனவே நம்பர் பிளேட்டை மறைப்பது, எண்களை அழிப்பது போன்ற முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி போக்குவரத்துத் துறையிடம் தொடர் சோதனைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது இந்த விவகாரம் ஆள்மாறாட்டக் குற்றமாக மாறியதால், டெல்லி போலீஸ் மூலம் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் எச்சரிக்கை: இனி இத்தகைய மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத் தண்டனை உள்ளிட்ட கடும் தண்டனை கிடைக்கும். பொதுமக்கள் FASTag-ஐ சரியாகப் பராமரிக்கவும், நம்பர் பிளேட்டை மாற்ற முயற்சிக்காதீர்கள் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications