வாகனங்களில் 'பாஸ்டேக்' ஸ்டிக்கரை ஒட்டாவிட்டால்.. கடும் நடவடிக்கை.. நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு
சென்னை: வாகனங்களில் 'பாஸ்டேக்' ஸ்டிக்கரை பொருத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் முன் கண்ணாடியில் இந்த ஸ்டிக்கரை ஒட்டாமல் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்.
பாஸ்டேக் ஸ்டிக்கர்: விதிகள் மற்றும் நடைமுறைகள்
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் குறித்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க முடியும்.

வாகன ஓட்டிகள், 'பாஸ்டேக்' ஸ்டிக்கரை கட்டாயம் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்ட வேண்டும். இந்த விதிமுறையை மீறும் வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும். இதனால், போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றுவது மிகவும் அவசியம். இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். மேலும், சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதை எளிதாக்குவதற்கும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் இது உதவும். எனவே, அனைவரும் இந்த விழிப்புணர்வை கடைப்பிடிக்க வேண்டும்.
வாகன ஓட்டிகள், 'பாஸ்டேக்' ஸ்டிக்கரை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம், தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த உத்தரவு, போக்குவரத்து விதிகளை கடுமையாக்குவதற்கான ஒரு பகுதியாகும். ஆகவே, வாகன ஓட்டிகள் அனைவரும் 'பாஸ்டேக்' ஸ்டிக்கரைத் தங்கள் வாகனங்களில் பொருத்தி, போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும். இதன் மூலம், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கலாம்.
வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் FASTag-களைப் பொருத்தாத ஓட்டுநர்களின் டேக்குகள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். சிலர் வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் FASTagஐ பொறுத்தாமல்.. கைகளில் வைத்து காட்டுகின்றனர். இது சுங்கச்சாவடி பாதைகளில் நெரிசலை ஏற்படுத்துகிறது. மேலும் சுங்க வசூலிப்பவர்களுடன் சில நேரங்களில் வாக்குவாதத்திற்கும் வழி வகுக்கிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
FASTag பிளாக் லிஸ்ட் ஆகி உள்ளதா என்று எவ்வாறு சரிபார்க்கலாம்:
• நீங்கள் செல்வதற்கு முன் உங்கள் FASTag செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்காக FASTag வாடிக்கையாளர் போர்ட்டலைப் பயன்படுத்தலாம்.
• அதிகாரப்பூர்வ NPCI போர்ட்டலில் (https://www.npci.org.in/what-we-do/netc-fastag/check-your-netc-fastag-status) உள்நுழையவும்.
• பேலன்ஸ் முறையாக உள்ளதா என்று சோதனை செய்ய வேண்டும்.
• உங்கள் கணக்கிற்கு தேவையான குறைந்தபட்ச தொகையை ரீசார்ஜ் செய்யவும்.
• கே.ஒய்.சி முறையாக இருக்கிறதா .. பிளாக் லிஸ்ட் நோட்டிபிகேஷன் வந்துள்ளதாக என்பதை பார்க்கவும்.
• இதை எல்லாம்.. டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே ரீசார்ச் செய்ய வேண்டும்.
கடுமையான FASTag விதிகள்
1. பாஸ்ட் டாக்கில் லோ பேலன்ஸ் இருந்தால்.. எல்லா டோல் கேட்டிலும் இனி ரீசார்ஜ் செய்ய முடியாது.
2. சிலருக்கு லோ பேலன்ஸ் காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால், டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே ரீசார்ச் செய்ய வேண்டும்.
3. அதாவது டோல்கேட் அருகே நின்று ரீ சார்ஜ் செய்தால்.. அதை டோல் கேட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
4. கே ஒய் சி காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால்.. டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே அதை சரி செய்ய வேண்டும். இந்த வாகனங்களின் பாஸ்ட் டாக் ஏற்றுக்கொள்ளப்படாது.
5. வாகனங்களுக்கு சட்ட ரீதியிலான வழக்கு, சிக்கல் இருந்தால், அதன் காரணமாக பாஸ்ட் டாக்.. பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால் அதை 1 மணி நேரத்திற்கு முன்பே சரி செய்திருக்க வேண்டும்.
6. பிளாக் லிஸ்ட் ஆகி இருக்கும் பாஸ்ட் டாக் எதையும் டோல் கேட்களில் பயன்படுத்த கூடாது.












Click it and Unblock the Notifications