ஒரு லிட்டருக்கு ரூ.15 தான் செலவு.. முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கும் கார்.. நிதின் கட்காரி அறிவிப்பு
மும்பை: பெட்ரோல், டீசலுக்கு மாற்றான வாகனங்களை இந்தியாவில் கொண்டுவர மத்திய அரசு அதிகம் விரும்புகிறது. அதற்காக மின்சார வாகனங்களுக்கு வரி சலுகை அளித்து வருகிறது. இந்நிலையில் முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கும் புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
அது எப்படி எத்தனாலில் கார் போகும்? பொதுவாக எத்தனால் என்பது பெட்ரோலுடன் சேர்க்கப்படும் ஒரு திரவம். இது முற்றிலும் எரிக்க உதவும். அதேநேரம் தீமையான உமிழ்வைக் குறைக்குது. அமெரிக்காவில் எத்தனால் கலந்த பெட்ரோல் தான் விற்பனை செய்யப்படுகிறது. 10 சதவிகிதம் எத்தனாலுடன் கலந்த எரிபொருள் தான் அங்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவிலும் குறிப்பிட்ட சதவீதம் எத்தனால் கலந்தே பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் 2025க்குள் 20 சதவீதம் எத்தனால் கலந்து எரிபொருள்களை விற்பனை செய்ய மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. அப்படி நடந்தால் அரசுக்கு பல்லாயிரம் கோடி அந்நியச்செலாவணி மிச்சம் ஆகும். அரசு அதற்காக எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறது.
இந்நிலையில் முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கக்கூடிய கார்களை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இது தொடர்பாக நேற்று நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இதனை தெரிவித்தார்.
முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கும் புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறிய கட்கரி, மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தலைவரை சமீபத்தில் தான் சந்தித்ததையும் மேடையில் நினைவு கூர்ந்தார்.
இதுபற்றி கட்கரி கூறும போது, "எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே தயாரிப்போம் என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்னிடம் கூறினார். முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கும் புதிய வாகனங்களை கொண்டு வருகிறோம்.பஜாஜ், டிவிஎஸ், ஹீரோ ஸ்கூட்டர்கள் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும்.
டொயோட்டா நிறுவனம் தங்களுடைய கேம்ரி காரை ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்த போகிறது. இது 100 சதவீதம் எத்தனாலில் இயங்குவதுடன், 40 சதவீத மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும்.
பெட்ரோலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், எத்தனால் 60 ரூபாயாக இருக்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 120 ரூபாய் வரை இருக்கிறது. 40 சதவீதம் மின்சாரம் உற்பத்தி செய்யும் என்பதால் சராசரியாக லிட்டருக்கு 15 ரூபாய் தான் செல்வு ஆகும்" என்று அவர் கூறினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications