Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு லிட்டருக்கு ரூ.15 தான் செலவு.. முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கும் கார்.. நிதின் கட்காரி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: பெட்ரோல், டீசலுக்கு மாற்றான வாகனங்களை இந்தியாவில் கொண்டுவர மத்திய அரசு அதிகம் விரும்புகிறது. அதற்காக மின்சார வாகனங்களுக்கு வரி சலுகை அளித்து வருகிறது. இந்நிலையில் முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கும் புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

அது எப்படி எத்தனாலில் கார் போகும்? பொதுவாக எத்தனால் என்பது பெட்ரோலுடன் சேர்க்கப்படும் ஒரு திரவம். இது முற்றிலும் எரிக்க உதவும். அதேநேரம் தீமையான உமிழ்வைக் குறைக்குது. அமெரிக்காவில் எத்தனால் கலந்த பெட்ரோல் தான் விற்பனை செய்யப்படுகிறது. 10 சதவிகிதம் எத்தனாலுடன் கலந்த எரிபொருள் தான் அங்கு விற்பனை செய்யப்படுகிறது.

New Vehicles will be Introduced that Run entirely on Ethanol: says Minister Nitin Gadkari

இந்தியாவிலும் குறிப்பிட்ட சதவீதம் எத்தனால் கலந்தே பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் 2025க்குள் 20 சதவீதம் எத்தனால் கலந்து எரிபொருள்களை விற்பனை செய்ய மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. அப்படி நடந்தால் அரசுக்கு பல்லாயிரம் கோடி அந்நியச்செலாவணி மிச்சம் ஆகும். அரசு அதற்காக எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறது.

இந்நிலையில் முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கக்கூடிய கார்களை கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இது தொடர்பாக நேற்று நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இதனை தெரிவித்தார்.

முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கும் புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறிய கட்கரி, மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தலைவரை சமீபத்தில் தான் சந்தித்ததையும் மேடையில் நினைவு கூர்ந்தார்.

இதுபற்றி கட்கரி கூறும போது, "எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே தயாரிப்போம் என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்னிடம் கூறினார். முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கும் புதிய வாகனங்களை கொண்டு வருகிறோம்.பஜாஜ், டிவிஎஸ், ஹீரோ ஸ்கூட்டர்கள் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும்.

டொயோட்டா நிறுவனம் தங்களுடைய கேம்ரி காரை ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்த போகிறது. இது 100 சதவீதம் எத்தனாலில் இயங்குவதுடன், 40 சதவீத மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும்.

பெட்ரோலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், எத்தனால் 60 ரூபாயாக இருக்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 120 ரூபாய் வரை இருக்கிறது. 40 சதவீதம் மின்சாரம் உற்பத்தி செய்யும் என்பதால் சராசரியாக லிட்டருக்கு 15 ரூபாய் தான் செல்வு ஆகும்" என்று அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+