போச்சு.. போச்சு.. இவி வாகனங்கள் வாங்க போறீங்களா? வைக்கப்பட்ட செக்! நிதின் கட்கரி இப்படி சொல்லிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் மக்கள் இவி வாகனங்களை கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்த தொடங்கி வரும் நிலையில், இவி வாகனங்களை வாங்க விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், மக்கள் இவி வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இவி வாகனங்களை ஏற்றுக்கொள்ள தொடங்கி உள்ளனர். அதனால், இந்தியாவுக்கு இனி EV வாகனங்களில் மானியம் தேவையில்லை.

automobile

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதமும், மின் வாகனங்களுக்கு 5 சதவீதமும் ஊக்கத்தொகையாக உள்ளது. இதுவே போதும். இதற்கு மேல் இவி வாகனங்கள் வாங்க சலுகைகள் வழங்க முடியாது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது, ​​வாகனங்களின் விலை குறையும். லித்தியம்-அயன் பேட்டரிகளின் விலை குறையும். லித்தியம்-அயன் பேட்டரிகள் குறையும் போது, ​​பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விலை உயரும். இதனால் இதில் சலுகைகள் அளிக்க வேண்டியது இல்லை.

EV துறை வளர்ந்து வருகிறது, இந்தியா விரைவில் சிறந்த EV சார்ஜிங் பாயிண்ட் உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும். நெடுஞ்சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் விரைவில் மின்சார சார்ஜிங் பாயின்ட்கள் அமைக்கப்படும். இதனால் நீண்ட தூரம் செல்லும் இ-பஸ்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காது, என்று கட்கரி கூறினார்.

தமிழ்நாடு இவி வாகனங்கள்: இன்னொரு பாக்ஜகாம் தமிழ்நாட்டில் இ வாகனங்களுக்கான பாஸ்ட் சார்ஜிங் போர்டுகளை அதிகரிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் வரும் நாட்களில் நடக்க உள்ளன. உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாயிண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாயிண்ட் அமைக்கப்பட உள்ளது.

சாலை ஓரம் அரசு நிலத்தில் தமிழ்நாடு முழுக்க 100 இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இந்த சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இங்கே மின்சாரம் வழங்கப்பட்டு அதில் சார்ஜிங் பாயிண்ட் இயங்கும். வரும் காலங்களில் மக்கள் பயன்பாட்டை பொறுத்து இந்த சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அதிகரிக்கப்படும்; முக்கியமாக தமிழ்நாட்டில் இ வாகனங்களுக்கான பாஸ்ட் சார்ஜிங் போர்டுகளை அதிகரிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் வரும் நாட்களில் நடக்க உள்ளன.

டெல்லி 21

குஜராத் 53

ஹரியானா 2

கர்நாடகா 10

கேரளா 30

மகாராஷ்டிரா 13

மேகாலயா 1

தமிழ்நாடு 13 பாஸ்ட் சார்ஜர்கள் உள்ளன. இதை 100க்கும் அதிகமாக உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாம். தமிழ்நாட்டிக் பாஸ்ட் சார்ஜர்கள் அவசியம் அதிகம் ஆகி உள்ளதால், அரசு சார்பாக இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+