வாகன ஓட்டிகளுக்கு ஷாக்.. சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வேயில் நடக்கும் சம்பவம்.. ஸ்டன் ஆன பயணிகள்!

பெங்களூர்: பெங்களூர்-சென்னை விரைவுச் சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இதற்கான கட்டணங்களை இறுதி செய்துள்ளது.
பெங்களூர்-சென்னை விரைவுச் சாலையின் கர்நாடகப் பகுதியில், ஹெடிகெனபெலே (ஹோஸ்கோட் பெங்களூர்) முதல் சுந்தரப்பல்யா (கேஜிஎஃப் அருகே) வரையிலான 71 கி.மீ தூரத்திற்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த வழித்தடத்தில் கார்களுக்கு ஒருமுறை சென்று வர ₹190 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
பெங்களூர் சென்னை எக்ஸ்பிரஸ் வே கட்டமா ,
ஏறக்குறைய ஏழு மாதங்களாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பயன்பாட்டில் இருந்து வரும் இந்தச் சாலையில், கட்டண வசூல் முறை முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு முடிந்தவுடன் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். ஹெடிகெனபெலேயிலிருந்து சுந்தரப்பல்யாவுக்கு கார்கள் மற்றும் ஜீப்களுக்கு ஒரு முறை பயணிக்க ₹185 கட்டணமாக வசூலிக்கப்படும், அதே போல் திரும்ப பயணிக்க ₹275 ஆக இருக்கும். அதே நேரத்தில், எதிர் திசையில் ஒரு முறைப் பயணக் கட்டணம் ₹190 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் ஒரு திசைக்கு ₹6,105 ஆகவும், எதிர் திசைக்கு ₹6,260 ஆகவும் இருக்கும்.
வாகனத்தின் வகை மற்றும் பயண திசையைப் பொறுத்து சுங்கக் கட்டணங்கள் மாறுபடும். இலகுரக வணிக வாகனங்கள் (LCV), இலகுரக சரக்கு வாகனங்கள் (LGV) மற்றும் மினி பேருந்துகளுக்கு, ஹெடிகெனபெலேயிலிருந்து சுந்தரப்பல்யாவுக்கு ஒரு முறை பயணிக்க ₹295 கட்டணமாக வசூலிக்கப்படும், மேலும் சென்று திரும்ப ₹445 ஆக இருக்கும். சுந்தரப்பல்யாவிலிருந்து ஹெடிகெனபெலேக்கு, கட்டணங்கள் சற்று அதிகமாக ஒரு முறைப் பயணத்திற்கு ₹305 ஆகவும் சென்று திரும்ப ₹455 ஆகவும் இருக்கும்.
கனரக வாகனங்களான டிரக்குகள்
அதேபோல், கனரக வாகனங்களான டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு, ஹெடிகெனபெலேயிலிருந்து ஒரு முறை பயணிக்க ₹620 கட்டணமாகவும், சென்று திரும்ப ₹930 ஆகவும் வசூலிக்கப்படும். சுந்தரப்பல்யாவிலிருந்து வரும்போது, கட்டணங்கள் முறையே ₹635 மற்றும் ₹955 ஆக உயரும்.
ஹெடிகெனபெலே, அக்ரஹாரா, கிருஷ்ணராஜபுரம் மற்றும் சுந்தரப்பல்யா ஆகிய இடங்களில் நான்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். மணிக்கு 120 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விரைவுச் சாலை, கேஜிஎஃப் மற்றும் கிழக்கு கர்நாடகாவுக்குச் செல்லும் பயணிகளுக்கு விருப்பமான பாதையாக மாறியுள்ளது.
இருப்பினும், இதன் அதிகாரப்பூர்வ திறப்பு தாமதமானது. மேலும், சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் இரு சக்கர வாகனங்களின் சட்டவிரோத நுழைவு போன்ற பல விதிமீறல்கள் நடக்கின்றன. தற்போது, சுற்றுச்சுவர் முழுமையாக கட்டப்படும் வரை சுங்கச்சாவடிகளிலும், முக்கிய இடங்களிலும் ஊர்க்காவல் படையினரை நியமிக்க NHAI அனுமதி கோரியுள்ளது.
இந்த பசுமை வழி விரைவுச் சாலை கர்நாடகா (76 கி.மீ), ஆந்திரப் பிரதேசம் (91 கி.மீ), மற்றும் தமிழ்நாடு (94 கி.மீ) என மொத்தம் 261 கி.மீ தூரம் கொண்டது. இதில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் இன்னும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, தினமும் 2,000 முதல் 2,500 வாகனங்கள் வரை இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றன. பெங்களூர்-கோலார் நெடுஞ்சாலையிலிருந்து விரைவுச் சாலையை அணுகுவதை அதிகரிக்கும் நோக்கில், இணைப்பு கிராமம் மற்றும் மாவட்ட சாலைகளை மேம்படுத்த கர்நாடகாவிற்கு NHAI ₹20 கோடி வழங்கியுள்ளது. இந்த பணிகள் முடிந்ததும், போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications