சிவக்குமாரின் லுங்கி, எளிமை, மனிதாபிமானம், தாய்பாசம்! சூர்யாவின் அகரம் ஆலமரத்துக்கு விதை போட்ட அப்பா
சென்னை: சிவகுமார் சாரிடம் எந்த விஷயத்திலும் போலித்தனம் இருக்காது. அவர் காட்டும் அன்பாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி, அது மிகவும் உண்மையாக இருக்கும் என்று திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் புகழ்ந்து பேசியிருக்கிறார்.. அத்துடன் சிவகுமார் தன்னுடைய அம்மா மீது வைத்திருந்த பாசத்தை பற்றியும் விரிவாக பேசியிருக்கிறார்.
Aramnaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "தன்னுடைய தாயின் மீது அதிக பிரியம் வைத்திருந்தவர் நடிகர் சிவகுமார்.. பொத்தி பொத்தி தன்னுடைய அம்மாவை கடைசிவரை பார்த்துக் கொண்டார்..

அந்த தாயார் மறைந்தபோது, சிவக்குமார் சார் ஒரு முதிர்ந்த மனிதராக இருந்தபோதிலும், அந்த துக்கத்திலிருந்து வெளிவர நீண்ட காலம் கஷ்டப்பட்டார். அம்மாவின் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பே இதற்கு காரணம்.
கல்வியின் முக்கியத்துவம்
சிவகுமார் சார், தொடக்கத்திலிருந்தே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். ஒவ்வொரு வருடமும் 10-வது மற்றும் 12-வது பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு 10,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கி வந்தார்... வருடா வருடம் இந்த பரிசுகளை தந்து வந்தார்.. அன்று தினத்தந்தியில் இந்த போட்டோக்கள் வெளிவரும்.. சூர்யா மற்றும் கார்த்தி இன்று கல்வி உதவி செய்ய இதுவே அடிப்படை விதையாக அமைந்தது.
தன்னை படிக்க வைக்க தன்னுடைய அம்மா எந்த அளவுக்கு கஷ்டங்களை அனுபவித்தார் என்பதை தன் பிள்ளைகளான சூர்யா, கார்த்தி, பிருந்தா மூவருக்கும் சிறு வயதிலிருந்தே சொல்லி வந்துள்ளார்.. அதனால் ஏற்பட்ட தான் இன்று 'அகரம் பவுண்டேஷன்' ஆக வளர்ந்து நிற்கிறது. சிவகுமார் விதைத்த விதை, இன்று ஆலமரமாக உயர்ந்து நிற்கிறது..
விதை - ஆலமரம்
பணம், பொருள் கொடுத்துவிடலாம், ஆனால், "கல்வி என்பது காலத்தால் அழியாத செல்வம்" என்பதை உணர்ந்து இந்த உதவியைச் செய்து வருகிறார்கள்.. இப்படியான உதவியை எந்த நடிகருமே திரையுலகில் இதுவரை செய்ததில்லை..
சிவகுமார் சார், எப்போதுமே வீட்டிலும் மிகவும் சாதாரணமாக, ஒரு கைலி, ஷர்ட் அணிந்து கொண்டு மிகவும் கேஷுவலாக இருப்பார்... தான் ஒரு பிரபல நடிகர் என்ற எண்ணமே
அவருக்கு கிடையாது.. தானோ அல்லது தன் பிள்ளைகளோ பெரிய நட்சத்திரங்கள் என்ற எண்ணம் அவரிடம் துளிகூட இருக்காது.
நல்ல குடும்ப தலைவன்
சிவகுமார் அவர்களிடம் எந்த விஷயத்திலும் போலித்தனம் இருக்காது. அவர் காட்டும் அன்பாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி, அது மிகவும் உண்மையாக இருக்கும்.
நல்ல குடும்ப தலைவனாகவே திகழ்ந்து வருகிறார்.. அகரம் அறக்கட்டளைக்கு ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் நிதியை சூர்யா வழங்கி வருகிறார்.. லகரம் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தின் லாபத்தில் ஒரு பகுதியை, அகரம் அறக்கட்டளைக்கு ஒதுக்கி வருகிறார்.. சிவகுமார் சார் மட்டுமல்ல, அவரது மனைவி லட்சுமி அம்மாவும் மிகவும் எளிமையானவர், இந்த நல்ல வளர்ப்பே பிள்ளைகளையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications