ரகசிய திருமணத்திற்கு பின் அடையாளத்தை மாற்றிய சமந்தா! டைட்டில் கார்டில் வரும் அந்த பெயர் இதுதான்!
சென்னை: தென்னிந்திய திரையுலகின் 'தீராவதி' சமந்தா, எப்போதுமே செய்திகளில் பேசுபொருளாக இருப்பவர். நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது தனது அடையாளத்தையே மாற்றும் அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளார்.

அக்கினேனி டூ நிடிமோரு: பெயரில் ஒரு மாற்றம்
கடந்த 2017-ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை மணந்தபோது, 'சமந்தா ரூத் பிரபு' என்ற தனது பெயருடன் அக்கினேனி குடும்பப் பெயரை இணைத்து 'சமந்தா அக்கினேனி' என மாற்றிக்கொண்டார். ஆனால், விவாகரத்துக்குப் பின் அந்தப் பெயரை நீக்கிவிட்டு மீண்டும் வெறும் சமந்தாவாகவே வலம் வந்தார்.
தற்போது தனது 'தி பேமிலி மேன்' இயக்குநர் ராஜ் நிடிமோருவை இரண்டாவதாகக் கரம் பிடித்துள்ள நிலையில், கணவர் மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாகத் தனது பெயரையும் மாற்றத் துணிந்துள்ளார். இதன்படி இனி அவர் 'சமந்தா நிடிமோரு' (Samantha Nidimoru) என அழைக்கப்படுவார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மா இன்டி பங்காரம் படத்தில் புதிய அறிவிப்பு
சமூக வலைதளங்களில் இன்னும் தனது பெயரை மாற்றாத சமந்தா, ஒரு மெகா பிளானுடன் காத்திருக்கிறார். அவர் தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'மா இன்டி பங்காரம்' (Maa Inti Bangaram) என்ற திரைப்படத்தின் டைட்டில் கார்டில், முதன்முறையாகத் தனது புதிய பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறாராம்.
நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை அனைத்தையும் மிகவும் ரகசியமாக வைத்திருந்த சமந்தா, தனது புதிய அடையாளத்தை ஒரு படத்தின் மூலம் உலகிற்குத் தெரியப்படுத்துவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
ராசியை மாற்றும் பெயர் சென்டிமென்ட்
சினிமா உலகில் பெயர் மாற்றம் என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு ராசி மற்றும் சென்டிமென்ட் விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. ராஜ் நிடிமோருவுடனான இந்த புதிய பயணம், சமந்தாவின் தனிப்பட்ட வாழ்விலும் திரை வாழ்விலும் புதிய அதிர்ஷ்டத்தைக் கொண்டுவருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications