Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் நிலைமை அவ்வளவுதான்னு சொன்னாங்க! ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்! அரவிந்த்சாமி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடித்துள்ள 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. மௌனப் படம் என்ற புதிய முயற்சியாக உருவான இந்த படம், ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலம், அரவிந்த் சுவாமி மீண்டும் முக்கிய கதாபாத்திரத்தில் திரைக்கு வந்துள்ளார்.

Gandhi Talks Vijay Sethupathi Arvind Swami Tamil Cinema

சினிமாவிலிருந்து விலகல்

2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரவிந்த் சுவாமி சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இதற்குக் காரணம், அவருக்கு ஏற்பட்ட கடுமையான விபத்து. அந்த விபத்து அவரது உடல்நிலையை பெரிதும் பாதித்தது. இதனால் நீண்ட காலம் வலியுடன் படுக்கையிலேயே கழிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

சமீபத்தில் மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அரவிந்த் சுவாமி, தனது விபத்து மற்றும் சிகிச்சை அனுபவங்களை உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.
"2005-ல் ஏற்பட்ட காயத்தால் ஒன்றரை வருடம் மிகுந்த வலியுடன் படுக்கையிலேயே இருந்தேன். அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்ததால் அந்த வலி நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த நேரத்தில், கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆயுர்வேத மருத்துவரை சந்தித்தேன். என்னைச் சுற்றி அலோபதி மருத்துவத்தில் நம்பிக்கை வைத்தவர்களே இருந்ததால், ஆயுர்வேதத்தை முன்பு பெரிதாக கவனிக்கவில்லை. ஆனால், அந்த மருத்துவரிடம் சிகிச்சை தொடங்கிய மூன்று நாட்களிலேயே நான் நடக்கத் தொடங்கினேன்," என அவர் கூறினார்.

அதே நேரத்தில், "இது எனக்கு வேலை செய்தது. ஆனால் எல்லோரும் இதையே பின்பற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் தங்களது மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். ஆயுர்வேதத்தில் பழங்கால ஞானம் இருக்கிறது. அது எனக்கு உதவியது. அதேபோல் அலோபதி மருத்துவத்திலும் பெரும் அறிவியல் இருக்கிறது. அது எனக்கு பலமுறை உதவியிருக்கிறது," என தனது கருத்தை பதிவு செய்தார்.

அரவிந்த் சுவாமி - பயோகிராபி

அரவிந்த் சுவாமி தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'தளபதி' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதனைத் தொடர்ந்து 'ரோஜா', 'பாம்பே', 'அலைபாயுதே' போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம், தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் அறியப்பட்ட நடிகராக மாறினார்.
ஹீரோவாக மட்டுமல்லாமல், 'தனி ஒருவன்' போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தும் தனது நடிப்பு திறமையை நிரூபித்துள்ளார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

அரவிந்த் சுவாமி நடித்த 'ரோஜா' படம் தேசிய அளவில் பெரும் கவனம் பெற்றது. அந்த படம் தேசிய விருதுகளை பெற்றதுடன், அவர் நடித்த கதாபாத்திரமும் அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது பாராட்டப்பட்டது. பல மாநில, தேசிய விருதுகள் பெற்ற படங்களில் அவர் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல், தொழில்முனைவோராகவும், சமூகப் பணிகளில் ஈடுபடுபவராகவும் பிரபலமாக இருக்கிறார்.

மீண்டும் திரையில் வலுவான வருகை

விபத்து, உடல்நிலை பாதிப்பு, நீண்ட ஓய்வு ஆகிய அனைத்தையும் கடந்து, மீண்டும் சினிமாவில் வலுவான கதாபாத்திரங்களுடன் திரும்பியிருப்பது அரவிந்த் சுவாமியின் வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. 'காந்தி டாக்ஸ்' போன்ற படங்களில் அவர் நடிப்பது, வயதும் அனுபவமும் கூடும் போது நடிகராக அவர் எடுத்துள்ள புதிய பாதையை வெளிப்படுத்துகிறது.

இந்த நிலையில், தனது வாழ்க்கையில் சந்தித்த கடின தருணங்களையும், அதிலிருந்து மீண்டு வந்த அனுபவங்களையும் வெளிப்படையாக பகிர்ந்த அரவிந்த் சுவாமியின் பேச்சு, ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+