சூர்யாவின் கருப்பு பட வெற்றிக்காக இப்படியும் செய்வாரா? ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த பிரம்மாண்ட காணிக்கை
சென்னை: சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வரும் 'கருப்பு' படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் அசத்தி வருகிறது. ரசிகர்களிடையே மாஸ் வரவேற்பைப் பெற்ற இந்த படம், சூர்யாவின் கம்பேக் ஹிட்டாக மட்டுமல்லாமல், 2026-ம் ஆண்டின் முக்கியமான தமிழ் வெற்றி படங்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. சமீபத்திய கணக்குகளின்படி ₹217 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆர் ஜே பாலாஜியின் நேர்த்திக்கடன்
இந்த வெற்றியின் உற்சாகத்தில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எடுத்திருக்கும் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மதுரையில் பிரசித்தி பெற்ற பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவிலுக்கு சென்று, 18 அடி உயர அருவாளை காணிக்கையாக செலுத்தியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இது சாதாரண விஜயம் அல்ல; 'கருப்பு' படத்தின் வெற்றிக்காக நன்றி செலுத்தும் விதமாக அவர் இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளார்.
18 அடி அரிவாள் காணிக்கை
இதுகுறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகளில், கோவில் வளாகத்தில் பூஜை நடத்தப்படுவது, அருவாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது, பின்னர் காணிக்கையாக சமர்ப்பிக்கப்படுவது போன்ற தருணங்கள் இடம்பெற்றுள்ளன. இதை பார்த்த ரசிகர்கள், "பட வெற்றியை கொண்டாடுவதற்குப் பதிலாக நன்றி செலுத்தச் சென்றிருக்கிறார்" என்று பாராட்டி வருகின்றனர்.
'கருப்பு' படம் ஆரம்பம் முதலே ஒரு வித்தியாசமான எதிர்பார்ப்பை உருவாக்கியது. சூர்யாவின் மாஸ் ஸ்கிரீன் பிரசென்ஸ், ஆர்.ஜே.பாலாஜியின் வேறுபட்ட இயக்க அணுகுமுறை, ஆன்மீக நம்பிக்கை கலந்த கதைமாந்தரம்-இவை அனைத்தும் ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்துச் சென்றன. முதல் நாளிலிருந்தே நல்ல ஓப்பனிங் பெற்ற படம், வார இறுதி வசூலில் பெரிய உயர்வு கண்டது. அதன் பிறகும் வாரநாட்களில் நிலைத்த வசூலைப் பதிவு செய்து, இரண்டாவது வாரத்திலும் ஸ்ட்ராங்காக ஓடிக்கொண்டிருக்கிறது.

கருப்பு பட வசூல் வெற்றி
சினிமா வட்டாரத்தில் இந்த வெற்றி சூர்யாவுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த சில படங்களின் கலவையான வரவேற்புக்குப் பிறகு, 'கருப்பு' அவருக்கு ஒரு உறுதியான கமர்ஷியல் வெற்றியைத் தந்துள்ளது என்ற கருத்து நிலவுகிறது. ரசிகர்களும் இந்த படத்தை சூர்யாவின் "கம்பேக்" திரைப்படமாகவே கொண்டாடி வருகின்றனர்.
ஆர்.ஜே.பாலாஜி குறித்து பேசும்போது, சமூக கருத்துகளோடு ஆன்மீக நம்பிக்கையையும் கலந்த காட்சிகளை தன்னுடைய படைப்புகளில் கொண்டு வர முயற்சிப்பவர் என்ற இமேஜ் ஏற்கனவே உள்ளது. இப்போது 'கருப்பு' வெற்றிக்காக கருப்பண்ண சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தியிருப்பது, அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

பாராட்டு
ஒரு படம் வெற்றி பெறும்போது கேக் வெட்டுவது, வெற்றி விழா நடத்துவது வழக்கம். ஆனால் 'கருப்பு' வெற்றியை ஆன்மீக நன்றியாக மாற்றி, மதுரை கருப்பண்ண சுவாமி சன்னதியில் 18 அடி அருவாள் காணிக்கை செலுத்தியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜியின் செயல், ரசிகர்களிடம் தனி கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.













Click it and Unblock the Notifications