மகனுக்கு இந்த தீர்ப்பை சமர்ப்பிக்கிறேன்! தப்பு பண்ண மாதம்பட்டி ரங்கராஜ் ஓட முடியாது: ஜாய் கிரிசில்டா
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என்றும், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை நீக்க வேண்டும் என்றும் ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதனை ஹைகோர்ட் இன்று டிஸ்மிஸ் செய்துவிட்டது.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, தன்னை திருமணம் செய்து உடன் வாழ்வதாக கூறி மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றியதாக போலீஸில் புகார் அளித்ததுடன், இது குறித்து சமூக வலைதளங்களிலும் பேட்டி அளித்திருந்தார்.

அத்துடன் மாதம்பட்டியுடன் இணைந்து எடுத்து கொள்ளப்பட்ட போட்டோக்கள், வீடியோக்களையும் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்து வந்தார்.. இதனால் தனது நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, ரங்கராஜ் நீதிமன்றத்தை நாடினார்.
ஜாய் கிரிசில்டா
விசாரணையின் போது, ஜாய் கிரிசில்டா தரப்பில், விவாகரத்து செய்துவிட்டதாக சொல்லி, ரங்கராஜ் திருமணம் செய்ததாகவும், பிறகு தன்னை ஏமாற்றியதாகவும் வாதிடப்பட்டது. மேலும், புகார் அளித்தபோது போலீஸார் உரிய விசாரணை நடத்தவில்லை என்றும், கர்ப்பிணியாக இருந்த நிலையில் காவல் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஜாய் தரப்பில் கூறப்பட்டது.
பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் வாதிடும்போது, ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யத் தயாராக இருப்பதாகவும், தந்தை என உறுதி செய்யப்பட்டால் குழந்தையின் பொறுப்பை முழுமையாக ஏற்க தயார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் அவதூறான வீடியோக்கள் பரப்பப்படுவதாகவும், சில யூடியூப் சேனல்கள் இதன் மூலம் பணமாக்கி வருவதாகவும் கூறி, அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.
மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.. இந்நிலையில், இன்று தீர்ப்பை வழங்கி, மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தீர்ப்பு வெளியானதுமே ஜாய், செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, இன்று எனக்கு தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. எனக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு தொடுத்திருந்தார்.. இன்ஸ்டாகிராமில் அவரை பற்றின வீடியோக்களை நான் டெலிட் செய்ய வேண்டும், சோஷியல் மீடியாவில் அவரை பற்றி எதுவும் பதிவிடக்கூடாது என்று வழக்கு தொடுத்தார்..
குழந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்
இந்த மனுவை இன்று நீதிபதி தள்ளுபடி செய்தார்.. நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.. எனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என்று ஏற்கனவே நான் அதிக நம்பிக்கையில்தான் இருந்தேன்.. தாமதத்தாலும்கூட, உரிய நீதி எனக்கு கிடைத்து விடும் என்பதில் நிறைய நம்பிக்கை இருந்தது..
தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்.. இப்போதும் நான் நீதிமன்றத்தை அதிகம் நம்பி உள்ளேன்.. தவறு செய்தவர்கள் கண்டிப்பா அனுபவித்தே ஆகணும்.. இன்று எனக்கு கிடைத்துள்ள இந்த தீர்ப்பை என்னுடைய குழந்தை ராகா ரங்கராஜுக்காக சமர்ப்பிக்கிறேன்..
பயந்து ஓடும் மாதம்பட்டி ரங்கராஜ்
அவர்தான் டிஎன்ஏ கேட்டாரு.. டிஎன்ஏ டெஸ்ட் பற்றி பேசி 2 மாதமாகிவிட்டது.. ஆனால் இதுவரை மௌனமாவே இருக்கிறார். பயந்து ஓடுகிறார் என்றே அர்த்தம்.. எதற்காக பயந்து ஓடுகிறார் என்று அவருக்கே தெரியும்.. தப்பு செய்துவிட்டு எங்கேயும் ஓடி ஒளிய முடியாது..
இதுவரை அதுதொடர்பான விளக்கத்தை நிரூபணத்தை அவர் தரவில்லை.. இதிலிருந்தே அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.. எந்த வாயால் டிஎன்ஏ டெஸ்ட் கேட்டாரோ, டிஎன்ஏ தொடர்பான தீர்ப்பும் வெளிவந்து, பொதுவெளியில் அனைத்தும் அம்பலமாகும்.. அந்த தீர்ப்பும் என் குழந்தைக்கு நீதியை பெற்றுத்தரும்" என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications