விஜய் கிறிஸ்தவ மத பற்றில் ரொம்ப தீவிரமானவரா? கனல் கண்ணன் உடைத்த ரகசியம்
சென்னை: கனல் கண்ணன், தமிழ் திரையுலகில் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்து புகழ் பெற்றவர். அதோடு சில படங்களில் நடிகராகவும் தோன்றியுள்ளார். ஆனால் இப்போது அவரது கவனம் முழுக்க ஆன்மிகத்தின் பக்கம் திரும்பியுள்ளது. மதுரவாயலில் அமைந்துள்ள தனது சொந்த கோவிலுக்கு விஜய், நயன்தாரா உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் வந்து சென்றிருப்பதாக கூறிய கனல் கண்ணன், விஜய் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதையை விவரித்தார்.
"விஜய் சார் ரொம்ப நல்ல மனிதர், ஆனால் அவர் மதம் சம்பந்தப்பட்ட ஆள் கிடையாது!" என்று தொடங்கிய கனல் கண்ணன், 1996-ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். "அப்போது நான் வட பழனி சிவன் கோவிலில் நிர்வாக பதவியில் இருந்தேன். பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்திருந்தோம். அந்த விழாவுக்கு விஜய் சார் சிறப்பு விருந்தினராக வந்தார்.

அங்கு சாமிக்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து, அவருக்கு பட்டை போட்டு மரியாதை செய்து அனுப்பினேன். ஷூட்டிங் நாட்களில் நான் அவரை பல கோவில்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். ஆனால் அவர் மத விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டாதவர்," என்று கூறினார் கனல் கண்ணன். இந்த தகவலை கேட்டதும் எங்கள் தளபதியையா கிறிஸ்தவர் என்று விமர்சித்தீர்கள் என்று கூறி வருகிறார்கள்.
இதோடு நிற்காமல், தனது கோவில் கட்டிய கதையையும் கனல் கண்ணன் பகிர்ந்தார். சிம்புவின் 'சரவணா' படத்தில் பணியாற்றிய போது, கோவில் கட்டும் திட்டத்தை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் கூறியுள்ளார். "முதல் டொனேஷனாக நீங்கள் தான் பணம் தர வேண்டும்," என்று கேட்டபோது, ரவிக்குமார் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாராம். ஆனால் மறுநாள் விஜிபி ஷூட்டிங் ஸ்பாட்டில், "டேய் கண்ணா, இங்க வா!" என்று அழைத்து ஒரு பண்டலை கொடுத்தார்.
அது என்னவென்று தெரியாமல் காரில் போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றபோது, உள்ளே 61 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரிந்தது! "அந்த பணத்தோடு, சினிமா பிரபலங்களிடம் இருந்து டொனேஷன் வாங்கி, என் சொந்த பணத்தையும் செலவு செய்து கோவிலை கட்டினேன்," என்று உணர்ச்சிபூர்வமாக கூறினார் கனல் கண்ணன். இந்த பேட்டி, சினிமா உலகின் பின்னணியில் உள்ள ஆன்மிக தொடர்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
-
Vijay: சைக்கிள் ஓட்டியபோது ரசிகர் எறிந்த பூக்கள்! வெடிகுண்டுனு நெனச்சி கேரவனுக்குள் ஓடினாரா விஜய்? -
திருப்பரங்குன்றம்: அவ்வளவு பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கு.. விஜய் மட்டும் வாய் திறக்கலையே! -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
தேர்தல் களத்தை விடுங்க.. சந்தையிலும் சூடுபறக்கும் விசில்.. விஜய் எண்ட்ரியால் திணறும் உற்பத்தியாளர்கள் -
மாட்டிகிட்டியே பங்கு! திமுகவின் வாக்குறுதியை காப்பியடித்து தவெகவின் வாக்குறுதியாக அறிவித்த விஜய் -
விசில் ஊதிக்கொண்டு சைக்கிளில் ரவுண்ட் அடித்த விஜய்.. தடுப்புகளை உடைத்துக்கொண்டு வந்த தவெக தொண்டர்கள் -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
நேர்ல வரலனாலும் நேராகவே பேசுறாரே! ஹாலோகிராமில் கும்பகோணத்தை அதிரவைத்த AI விஜய் -
கன்னியாகுமரியில் விஜய் ஓட்டிய சைக்கிள்… விலை இவ்வளவு தானா? அதை வாங்கும் போது நடந்த சம்பவம் -
வருமான வரியை மறைத்ததாக வழக்கு!ரூ 1.50 கோடி அபராதத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போன விஜய் -
ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்தது விஜய்யா? சென்சாரா? புது பாயிண்ட் சொல்லும் எஸ்.வி.சேகர்












Click it and Unblock the Notifications