நாகார்ஜுனாவுக்கு ரூ.8000 கோடி சொத்து.. மாதா மாதம் அந்த நடிகைக்கு மணியார்டரில் போகும் "அன்புத்தொகை"
சென்னை: நாகார்ஜூனா பலருக்கும் பல உதவிகளை செய்து வருபவர்.. அவர் செய்யும் உதவிகள் வெளியில் தெரிவதில்லை.. தெலுங்கானா பகுதியில் சுமார் 1500 ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்து, அதன் பராமரிப்பு செலவுகளையும் நாகார்ஜுனாவே ஏற்று நடத்தி வருகிறார் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "நாகார்ஜூனா அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர்.. பழகும் விதமே எளிமையாக இருக்கும்.. பள்ளியில் படிக்கும்போதிருந்தே திமிர் இருக்காது.. சகஜமாக, அனைவரிடமும் பழகக்கூடியவராக வளர்ந்துள்ளார்..

யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை தரக்கூடியவர்.. ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்தவர் கிடையாது.. வசதி படைத்தோரை BORN WITH SILVER SPOON என்பார்கள், ஆனால் நாகார்ஜூனாவை BORN WITH DIAMOND SPOON என்றே சொல்லலாம்.. அந்த அளவுக்கு பெரிய கோடிகளில் சொத்துள்ள அதிபதி.
நாகார்ஜுனா சொத்து
அவருக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் விலைமதிப்பில்லாத சொத்தாக அவருக்கு மாறிவிட்டது.. அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய ஸ்டுடியோக்களில் ஒன்றாக உள்ளது.. இதன் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும்.,
ஹைதராபாத்தில் ஜூப்லி ஹில்ஸில் அவருக்கு ஒரு பிரம்மாண்டமான வீடு உள்ளது. இதன் மதிப்பு மட்டும் சுமார் 50 கோடி ரூபாயாகும்.. இதைத்தவிர ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார்.. லாபம் தரும் தொழிலாக ரியல் எஸ்டேட் உள்ளது..
நம்பர் 1 பணக்காரர் - அன்னபூர்ணா ஸ்டுடியோ
தென்னிந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக உள்ளார். 7000, 8000 கோடி ரூபாய் வரையிலான சொத்து மதிப்பு வைத்துள்ளதாக சொல்கிறார்கள். அதன் மதிப்பும் உயர்ந்தபடியே உள்ளது.. பெரும்பாலும் தனது சொந்த தனி விமானத்தையே பயன்படுத்துகிறார். பல விலையுயர்ந்த சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.
அதேபோல பலருக்கும் பல உதவிகளை செய்து வருபவர் நாகார்ஜூனா.. அவர் செய்யும் உதவிகள் வெளியில் தெரிவதில்லை... தெலுங்கானா பகுதியில் சுமார் 1500 ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்து, அதன் பராமரிப்புச் செலவுகளையும் நாகார்ஜுனாவே ஏற்று நடத்தி வருகிறார்.
நடிகை ரமாபிரபா
மறைந்த நடிகை ரமா பிரபாவிற்கு நிறைய உதவிகளை தொடர்ந்து செய்து வந்தார்.. காரணம், ரமாபிரபா தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகையாவார்.. இவர் நடிகர் சரத் பாபுவின் முதல் மனைவி ஆவார்...நாகார்ஜுனாவின் அப்பா நாகேஸ்வர ராவ், ரமாபிரபா அன்று தன்னுடைய சொந்த மகள் போலவே கருதி மிகவும் பாசமாக நடத்தினார்.
நாகேஸ்வர ராவ் உயிருடன் இருந்தவரை, தான் நடிக்கும் அனைத்துப் படங்களிலும் ரமா பிரபாவிற்கு நடிப்பதற்கோ அல்லது டப்பிங் பேசுவதற்கோ ஏதாவது ஒரு வாய்ப்பை தந்துவிடுவார்... நாகேஸ்வர ராவ் மறைந்த பிறகு, ரமா பிரபா ஆந்திராவின் மதனப்பள்ளி என்ற கிராமத்தில் வசித்து வந்தார். ஆனால், அப்போதுகூட ஒவ்வொரு மாதமும் உதவிகள் பண உதவி ரமா பிரபாவுக்கு கிடைத்து கொண்டேயிருந்தது..
மணியார்டர் - அன்புத்தொகை
யார் அந்த மணியார்டரை தொடர்ந்து அனுப்பி வைக்கிறார்கள்? என்ற விவரமே ரமாபிரபாவுக்கு தெரியாமல் இருந்துள்ளது.. யாரென்று தெரியாத ஒருவரிடமிருந்து பணம் கிடைத்து வந்த நிலையில், அந்த பணத்தை அனுப்பி வைத்து கொண்டிருப்பதே நாகார்ஜுனா என்பது நீண்ட நாட்களுக்கு பிறகுதான் தெரிய வந்தது.
தன்னுடைய அப்பா ரமா பிரபா மீது வைத்திருந்த பாசத்தையும், அவருக்குச் செய்த உதவியையும், அப்பா மறைந்த பிறகும் நாகார்ஜுனா தொடர்ந்து செய்து வந்தார். ரமா பிரபாவுக்கு இப்போதுகூட அந்த அன்புத்தொகை சென்று கொண்டுதான் உள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications