Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டி ராஜேந்தர் இப்படி செய்யலாமா? சிம்புவிடம் நேரடியாகவே சொன்னேன்! நடிகர் ராதாரவி ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கத்தில், 42 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, பட்டி தொட்டி எங்கும் ஓடி மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற படம் 'உயிருள்ளவரை உஷா'. காதல், சென்டிமென்ட், பாடல்கள் என அன்றைய காலத்து ரசிகர்களை கட்டிப்போட்ட இந்த திரைப்படம், இப்போது மீண்டும் திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது. இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்ட டி. ராஜேந்தர், இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

முதலில் இன்று படத்தை மறுவெளியீடு செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சிம்புவின் 'சிலம்பாட்டம்' திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் ஆனதால், தன்னுடைய படத்தின் தேதியை மாற்றி வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, 'உயிருள்ளவரை உஷா' ரீ-ரிலீஸ் தொடர்பாக ஒரு சிறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் டி. ராஜேந்தர், இயக்குநர் செல்வமணி, கலைப்புலி எஸ். தாணு, நடிகர்கள் ராதாரவி, நளினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, அந்தப் படத்தின் நினைவுகளையும், டி.ஆருடன் கொண்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

Uyirullavarai Usha T Rajendar Radha Ravi Tamil Cinema

ராதா ரவி பேச்சு

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பகிர்ந்த அனுபவங்கள் அரங்கில் இருந்த அனைவரையும் சிரிக்கவும், ஆச்சரியப்படவும் வைத்தன. தனது திரைப் பயணத்தின் ஆரம்ப காலத்தில் ஒன்றிரண்டு படங்களில் நடித்த பிறகு, நீண்ட காலமாக வாய்ப்புகள் இல்லாமல் தவித்ததாக அவர் கூறினார். சுமார் எட்டு ஆண்டுகள் வரை சினிமாவில் எந்தவிதமான பெரிய வாய்ப்பும் கிடைக்காமல், வாழ்க்கை குறித்து குழப்பத்தில் இருந்ததாகவும், அப்போது அமெரிக்காவில் வசித்த தனது சகோதரியின் வீட்டிற்குச் போக முடிவு செய்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த நேரத்தில்தான், டி. ராஜேந்தர் தன்னை தொடர்பு கொண்டு 'உயிருள்ளவரை உஷா' படத்தில் நடிக்க அழைத்ததாக ராதாரவி பேசினார். அந்தப் படத்தில் நளினியின் அண்ணனாகவும், அதே நேரத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். அந்த ஒரே படம் தான் தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றி விட்டதாக அவர் கூறினார். அதன்பிறகு தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனி அடையாளத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கிக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் டி. ராஜேந்தரின் தனித்துவமான பழக்கங்களைப் பற்றியும் ராதாரவி சுவாரசியமாக பகிர்ந்தார். டி.ஆர் நேரம், காலம், சாஸ்திரம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை வைப்பவர் என்றும், ஒரு முறை அவரது வீட்டிற்கு சென்றபோது ஏற்பட்ட ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாக கூறினார்.

அதாவது, மாடியில் இருந்த டி.ஆருக்கு வணக்கம் சொல்லி கையசைத்த போது, அவர் பேசாமல் உள்ளே சென்றது தன்னை கோபப்பட வைத்ததாகவும், பின்னர் அதற்கான காரணம் கேட்டபோது, "அந்த நேரத்தில் பேசக்கூடாது" என்று ஜோதிட ரீதியான காரணத்தை டி.ஆர் சொன்னதாகவும் ராதாரவி தெரிவித்தார். அந்த சம்பவம் தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகவும் அவர் கூறினார்.

ராதாரவியின் பேச்சில் இன்னொரு சுவாரசியமான விஷயமாக, சிம்புவை சந்திக்கும் போதெல்லாம் "உன் அப்பாவைப் போல நீ முழுமையாக வர முடியாது" என்று நகைச்சுவையாக சொல்லிக் கொண்டே இருப்பதாகவும், கலைக்கு முழுமையாக அர்ப்பணித்த ஒரு மனிதராக டி. ராஜேந்தர் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தலையில் இருந்து பாதம் வரை கலையால் வாழ்ந்த ஒரு கலைஞன் டி.ஆர் என்றும், அதே சமயம் தனது மகன்களையும் திரையுலகுக்குள் கொண்டு வந்து அவர்களுக்கான பாதையை அமைத்துக் கொடுத்தவர் என்றும் ராதாரவி புகழ்ந்து பேசினார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தை அடையாளப்படுத்திய படங்களில் ஒன்றாக 'உயிருள்ளவரை உஷா' பார்க்கப்படுகிறது. அந்தப் படத்தின் பாடல்கள் இன்றும் பலரின் நினைவுகளில் வாழ்ந்து வருகின்றன. டி. ராஜேந்தரின் தனித்துவமான வசனங்கள், இசை, பாடல்வரிகள் ஆகியவை அந்த காலத்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. இப்போது இந்த படம் ரீ-ரிலீஸ் ஆகும் நிலையில், பழைய ரசிகர்களுக்கு இது ஒரு நினைவுப் பயணமாகவும், புதிய தலைமுறை ரசிகர்களுக்கு ஒரு பழைய காலத்து சினிமாவின் அனுபவமாகவும் அமைய உள்ளது.

மொத்தத்தில், 'உயிருள்ளவரை உஷா' ரீ-ரிலீஸ் என்பது வெறும் ஒரு படம் மீண்டும் திரைக்கு வருவது மட்டும் அல்ல. அது டி. ராஜேந்தர் தலைமுறை சினிமாவின் நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், ராதாரவி போன்ற பல நடிகர்களின் வாழ்க்கையில் அந்த படம் ஏற்படுத்திய திருப்புமுனைகளை நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+