துபாய்-தமிழக மாணவருக்கு அறிவியல் தேர்வில் தங்கப்பதக்கம்
Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஆர். முஹம்மது இஹ்சானுல்லாஹ் அந் நாட்டு கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்ட அறிவியல் திறனறிவுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றமைக்காக தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இராமநாதபுரத்தைச் சேர்ந்தவரான இவரது தந்தை துபாய் ஈடிஏ ஜீனத் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தங்கப்பதக்கம் பெற்ற மாணவரை பள்ளி நிர்வாகிகளும், தலைமை ஆசிரியர், பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications