For Quick Alerts
For Daily Alerts
Just In
பிரிதல்கள்
நீயில்லா வெறுமை உணர்த்தும் என்
நகராப்பொழுதுகளில் பால்வீதியின்
இலக்கற்று சிதறலாயலையுமொரு
துகளென உணர்கிறேன்...
எல்லாம் எடுத்துக்கொண்டாயிற்று
உன் சிறுபடமுட்பட..
ஒவ்வொரு அங்குலமாய் நீர் தெளித்து
துடைத்துமாயிற்று வீட்டை..
வெளிவந்து
தீ வைத்துக்கொளுத்தினேன்..
தீவென பிரிந்தாயிற்று
பிள்ளைகளிடமும் காணமுடிகிறது
நம்மீதான வெறுப்பை..
சிரித்துக்கடக்கிறேன்
வாழ்க்கை தொடர்கிறது
கற்றுக்கொடுத்தலை...
கண்கள் பனிக்க உன்
எல்லா உறுப்புகளையும்
தானாமாய் கொடுக்கிறேன்
உன் இறத்தலை-
இருத்தலாக்கி பிரிந்தாய்...
கடைசியின் கடைசியாய்
மிஞ்சிப்போய்விடக்கூடிய பயமெனக்கு
ஏதோவொன்றிற்காய் காத்திருக்கிற்தென் உயிர்
எப்போதும் நிகழலாமென் மரணமெனச்சொல்லி
பலகாலமாயிற்று...உலகின்கடைசிமனிதாகிவிட
சாத்தியமும்கூட...
-ரிஷி சேது ([email protected])
Comments
Story first published: Saturday, June 27, 2009, 18:20 [IST]