'கேசினோக்கள்' மூலம் இந்தியாவுக்குள் வரும் தீவிரவாத பணம்!

டாலக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதையடுத்து இந்திய சூதாட்ட விடுதிகளுக்கு (casinos) வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.
இந்தியாவின் சூதாட்ட தலைநகரம் என்றால் அது கோவா தான். இங்குள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களிலும் பல சாதாரண ஹோட்டல்களிலும் ஏராளமான கேசினாக்கள் உள்ளன. மேலும் கோவா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இதற்கெனவே மிதக்கும் கேசினோக்களும் இயங்குகின்றன.
இதைத் தவிர சிக்கிம் மாநிலத்திலும் ஏரளமான கேசினோக்கள் உள்ளன. கோவா, சிக்கிமில் தான் சூதாட்ட விடுதிகளை அந்த மாநில அரசுகள் அனுமதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மகாவ் பகுதி தான் சூதாட்ட விடுதிகளுக்கு பெயர் போனது. அடுத்த இடத்தில் உள்ளது சிங்கப்பூர்.
ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டதால், இந்த நாடுகளை விட இந்தியாவில் சூதாடுவது 'சீப்' ஆகிவிட்டது. இதனால், கோவா மற்றும் சிக்கிமை நோக்கி வரும் வெளிநாட்டு சூதாட்டப் பேர்வழிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.
ஆனால், இந்திய சூதாட்ட விடுதிகளுக்கு வரும் பணத்தை கண்காணித்து வரும் மத்திய அரசின் நிதித்துறையின் உளவு அமைப்பான Financial Intelligence Unit (FIU), சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்யும் அமைப்புகளும், இந்த கேசினோக்கள் மூலமாக நாட்டுக்குள் பணம் அனுப்பி வருவது தெரியவந்துள்ளது.
கடந்த ஓராண்டில் கேசினோக்களுக்கு வந்துள்ள வெளிநாட்டு பணத்தில் 7,006 பணப் பரிமாற்றங்கள் சந்தேகத்துக்குரியவை (Suspicious Transactions) என எப்ஐயு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு முதலே இந்திய கேசினோக்கள் அன்னிய செலவாணி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீன் கொண்டு வரப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் செல்வதைத் தடுக்க Financial Action Task Force என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பும் இந்திய உளவுப் பிரிவுகளும் நிதித்துறை உளவு அமைப்பும் இணைந்து இந்தியாவுக்குள் வரும் அன்னிய செலவாணியை கண்காணித்து வருகின்றன.
இந்த அமைப்புகள் கடந்த ஓராண்டில் மட்டும் 7,006 சந்தேகத்துக்கிடமான நிதிப் பரிமாற்றங்களை கண்டுபிடித்துள்ளன. இதையடுத்து இந்திய சூதாட்ட விடுதிகளுக்கு வரும் வெளிநாட்டு நிதியை மேலும் கண்காணிக்க வசதியாக, இது தொடர்பாக சில சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications