செம அழகு.. சுவீடனில் இப்படி ஒரு கிரகணமா? 5 ஆக பிரிந்தா சூரியன்? டிரெண்டாகும் வீடியோ - Fact Check
ஸ்டாக்ஹோம்: சுவீடன் நாட்டின் மலைப்பகுதியில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு சூரியன் ஐந்து ஓளிக்கதிர்களாக தென்பட்டதாக சமூக வலைதளங்கள் வீடியோ வெளியாகி காண்போரை கவர்ந்து இருக்கும் நிலையில் இதன் உண்மை தன்மையை அலசுகிறது இந்த செய்தி.
2022 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு நாடுகள், மேற்கு ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், வடக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் இன்று மாலை தென்பட்டது.
இந்தியாவில் மேற்கு வங்கத்துக்கு அப்பால் உள்ள அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தென்பட்டுள்ளது.

இந்தியாவில் கிரகணம்
இந்தியாவில் இன்று மாலை 4:29 மணிக்கு தென்படத் தொடங்கிய இந்த சூரிய கிரகணம், சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் மறைந்தது. முக்கிய நகரங்களில் மாலை 5:30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் மக்கள் பார்த்து ரசித்தனர். இந்தியாவில் மொத்தம் 1.45 மணி நேரம் இந்த கிரகணம் தென்பட்டது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், கோவை, ஊட்டி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் என மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தென்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் சூரிய கிரகணம் தெரிந்துள்ளது.

பகிரப்படும் படங்கள்
இந்த சூரிய கிரகணத்தை சாதாரண கண்களில் சூரிய கிரகணத்தை பார்க்கக்கூடாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தனர். தொலைநோக்கிகள் உதவியுடன் இதனை பொதுமக்கள் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தமிழ்நாட்டில் சூரிய கிரகணம் தென்பட்டதற்காக புகைப்படங்களையும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

சுவீடனில் கிரகணம்
இந்த புகைப்படங்களுக்கு மத்தியில் சுவீடனில் தென்பட்ட சூரிய கிரகணம் என்ற ஒரு வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. பனிசூழ்ந்த ஒரு மலைப்பகுதியில் அதில் சூரியன் 5 ஒளிக்கதிர்களாக காட்சி தருகிறது. இதனை அந்த மலைப்பகுதியில் பனிச்சருக்கு விளையாடும் வீரர்களும், பொதுமக்களும் ஆவலுடன் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

உண்மையான வீடியோவா?
நிறபிரிகை மற்றும் ஒளி வட்டத்தால் சூரியன் 5 பிரிவுகளாக பிரிந்து காட்சியளிக்கிறது என்ற விளக்கத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. ஆனால், சுவீடன் நாட்டு ஊடகங்கள் மற்றும் பிற சர்வதேச ஊடகங்களில் இந்த வீடியோவும், செய்தியும் வெளியிடப்படவில்லை. எனவே இது உண்மையான தகவல்தானா என்ற தேடுதலில் ஒன் இந்தியா ஈடுபட்டது.

5 ஆண்டு பழைய வீடியோ
இந்த வீடியோ இதற்கு முன் ஊடகங்களில், இணையதளங்களில் வெளியாகி உள்ளதா என்று நாம் தேடியபோது, தி லோக்கல் என்ற சுவீடன் ஊடகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட் பகிரப்பட்டு உள்ளது. முதன்முதலில் இந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டவர் லட்விக் என்ற பனிச்சருக்கு வீரர். வளிமண்டத்தில் உறைந்த நிலையில் இருக்கு தண்ணீரில் சூரிய ஓளி பட்டு பிரதிபலிப்பதால் இவ்வாறு காட்சியளிப்பதாக நாசா விளக்கியுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
வெளியான செய்தி: சூரிய கிரகணத்தின்போது சுவீடன் மலைப்பகுதியில் சூரியன் 5 ஆக பிரிந்து காட்சியளித்ததாக பகிரப்படும் வீடியோ.
முடிவு
4 ஆண்டுகளுக்கு முன் சுவீடனில் எடுக்கப்பட்ட வீடியோ இது. சூரிய கிரகணத்தின்போது இவ்வாறு நிகழவில்லை
ரேட்டிங்
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications