Fact check: 104க்கு போன் பண்ணா‘ரத்தம்’ வரும்..450 ரூபாய் தான்! வாட்ஸ் ஆப்பில் உலாவும் தகவல் உண்மையா?
சென்னை: "மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய திட்டம் பிளட் ஆன் 104. அதாவது 104 என்ற எண்ணுக்குப் போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும். ஒரு பாட்டில் ரூ. 450 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து செலவாக கூடுதலாக ரூ. 100 தர வேண்டும்." என தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா என பார்க்கலாம்..
இந்தியாவில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் சாலை விபத்துகளில் சிக்கி தங்கள் இன்னுயிரை இழந்து வருகின்றனர். மேலும் பலர் நிரந்தரவு ஊனம், பலத்த காயமடைந்து தங்கள் வாழ்வை தொலைத்து வருகின்றனர்.

எதிர்பாராத விபத்துகளில் சிக்குவோருக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது. தானமாக பெறப்படும் ரத்தத்தில், ரத்த சிவப்பணுக்கள், தட்டையணுக்கள், வெள்ளையணுக்கள் என ரத்தத்தை பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
ப்ளட் ஆன் கால்: இருந்த போதும், இந்தியாவில் உள்ள ரத்த வங்கிகளில் போதிய அளவு ரத்தம் இருப்பு இல்லை. இதன் காரணமாக சில நேரங்களில் அறிய வகை ரத்தம் கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படும் நிலை கூட இருக்கிறது. இதனையடுத்து தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இளைஞர்கள் அதிக அளவில் ரத்த தானம் செய்ய வேண்டும் என ஊக்குவித்து வருகின்றன. மேலும் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து ரத்தம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தற்போது '104' என்ற எண்ணுக்கு கால் செய்தால் உடனடியாக ரத்தம் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
குறுஞ்செய்தி: அதில்,"*அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் போகிறது. "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர். இந்த எண்ணை அழைத்த பிறகு, 40 kms சுற்றளவில், நான்கு மணி நேரத்திற்குள், இரத்தம் டெலிவரி செய்யப்படும்.. ஒரு பாட்டிலுக்கு ரூ.450/- மற்றும் போக்குவரத்துக்கு ரூ.100/-. தயவுசெய்து இந்த செய்தியை மற்ற நண்பர்கள், உறவினர் ஆகியோருக்கும் மற்றும் நீங்கள் தொடர்பில் இருக்கும் குழுவிற்கும் அனுப்பவும். இந்த வசதி மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.." என கூறப்பட்டுள்ளது.
ரத்தம் கிடைக்குமா?: ஆனால் அந்த எண்ணுக்கு அழைத்தால் ரத்தம் கிடைக்காது தமிழக அரசின் மருத்துவ உதவி தான் கிடைக்கும். தற்போது இந்த செய்தியானது தவறானது என தெரிய வந்திருக்கிறது. 'பிளட் ஆன் கால் 104' என்ற சேவை 2013ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு ஒரு சில மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போதிய ரத்தம் கிடைக்காததாலும் சில நடைமுறை சிக்கல்கள் காரணமாகவும் 2022ஆம் ஆண்டிலேயே இந்த திட்டம் கைவிடப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை என்ன?: அதே நேரத்தில் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் தமிழ்நாட்டில் மருத்துவ உதவிகளை பெறலாம். இந்த உதவி எண்ணை தமிழ்நாடு அரசே அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் தமிழக அரசின் மருத்துவ சேவைகள் மனநல ஆலோசனை நோய் தொடர்பான சந்தேகங்கள் ரத்ததானம் உடல் உறுப்புகள் தொடர்பான விவரங்களை கேட்டுக் கொள்ளலாம்.

Fact Check
வெளியான செய்தி
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய திட்டம் ’பிளட் ஆன் 104’. அதாவது 104 என்ற எண்ணுக்குப் போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும். ஒரு பாட்டில் ரூ. 450 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முடிவு
'BLOOD ON CALL 104' என்ற திட்டம் மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு கைவிடப்பட்டது. தற்போது ரத்தம் கிடைக்கும் என்ற செய்தி போலியானது ஆகும்
ரேட்டிங்
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications