Fact check: 104க்கு போன் பண்ணா‘ரத்தம்’ வரும்..450 ரூபாய் தான்! வாட்ஸ் ஆப்பில் உலாவும் தகவல் உண்மையா?
சென்னை: "மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய திட்டம் பிளட் ஆன் 104. அதாவது 104 என்ற எண்ணுக்குப் போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும். ஒரு பாட்டில் ரூ. 450 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து செலவாக கூடுதலாக ரூ. 100 தர வேண்டும்." என தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா என பார்க்கலாம்..
இந்தியாவில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் சாலை விபத்துகளில் சிக்கி தங்கள் இன்னுயிரை இழந்து வருகின்றனர். மேலும் பலர் நிரந்தரவு ஊனம், பலத்த காயமடைந்து தங்கள் வாழ்வை தொலைத்து வருகின்றனர்.

எதிர்பாராத விபத்துகளில் சிக்குவோருக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது. தானமாக பெறப்படும் ரத்தத்தில், ரத்த சிவப்பணுக்கள், தட்டையணுக்கள், வெள்ளையணுக்கள் என ரத்தத்தை பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
ப்ளட் ஆன் கால்: இருந்த போதும், இந்தியாவில் உள்ள ரத்த வங்கிகளில் போதிய அளவு ரத்தம் இருப்பு இல்லை. இதன் காரணமாக சில நேரங்களில் அறிய வகை ரத்தம் கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படும் நிலை கூட இருக்கிறது. இதனையடுத்து தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இளைஞர்கள் அதிக அளவில் ரத்த தானம் செய்ய வேண்டும் என ஊக்குவித்து வருகின்றன. மேலும் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து ரத்தம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தற்போது '104' என்ற எண்ணுக்கு கால் செய்தால் உடனடியாக ரத்தம் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
குறுஞ்செய்தி: அதில்,"*அரசாங்கத்தின் புதிய திட்டம்..... "இன்று முதல், "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் போகிறது. "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர். இந்த எண்ணை அழைத்த பிறகு, 40 kms சுற்றளவில், நான்கு மணி நேரத்திற்குள், இரத்தம் டெலிவரி செய்யப்படும்.. ஒரு பாட்டிலுக்கு ரூ.450/- மற்றும் போக்குவரத்துக்கு ரூ.100/-. தயவுசெய்து இந்த செய்தியை மற்ற நண்பர்கள், உறவினர் ஆகியோருக்கும் மற்றும் நீங்கள் தொடர்பில் இருக்கும் குழுவிற்கும் அனுப்பவும். இந்த வசதி மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.." என கூறப்பட்டுள்ளது.
ரத்தம் கிடைக்குமா?: ஆனால் அந்த எண்ணுக்கு அழைத்தால் ரத்தம் கிடைக்காது தமிழக அரசின் மருத்துவ உதவி தான் கிடைக்கும். தற்போது இந்த செய்தியானது தவறானது என தெரிய வந்திருக்கிறது. 'பிளட் ஆன் கால் 104' என்ற சேவை 2013ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு ஒரு சில மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போதிய ரத்தம் கிடைக்காததாலும் சில நடைமுறை சிக்கல்கள் காரணமாகவும் 2022ஆம் ஆண்டிலேயே இந்த திட்டம் கைவிடப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை என்ன?: அதே நேரத்தில் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் தமிழ்நாட்டில் மருத்துவ உதவிகளை பெறலாம். இந்த உதவி எண்ணை தமிழ்நாடு அரசே அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் தமிழக அரசின் மருத்துவ சேவைகள் மனநல ஆலோசனை நோய் தொடர்பான சந்தேகங்கள் ரத்ததானம் உடல் உறுப்புகள் தொடர்பான விவரங்களை கேட்டுக் கொள்ளலாம்.

Fact Check
வெளியான செய்தி
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய திட்டம் ’பிளட் ஆன் 104’. அதாவது 104 என்ற எண்ணுக்குப் போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும். ஒரு பாட்டில் ரூ. 450 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முடிவு
'BLOOD ON CALL 104' என்ற திட்டம் மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு கைவிடப்பட்டது. தற்போது ரத்தம் கிடைக்கும் என்ற செய்தி போலியானது ஆகும்
ரேட்டிங்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications