என்னாது.. கோவிட் தடுப்பூசி போட்ட புடின் மகள் உயிரிழப்பா?.. வேகமாக பரவும் பொய் செய்தி!
மாஸ்கோ: ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொண்ட அதிபர் விளாதிமிர் புடினின் மகள் உயிரிழந்துவிட்டதாக தவறான ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியில் துளி கூட உண்மையில்லை.
உயிர்க் கொல்லியான கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் போட்டி போட்டு கொண்டு இறங்கியுள்ளன. இந்த நிலையில் ரஷ்யாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

தடுப்பு மருந்தை கண்டுபிடித்த முதல் நாடு ரஷ்யா என்றும் சொல்லப்பட்டு வந்தது. இதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாகவும் அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்த தடுப்பு மருந்தின் முதல் டோஸை எனது மகளுக்கு கொடுத்துள்ளோம். அவருக்கு ஆரம்பத்தில் காய்ச்சல் இருந்தது.
அது உடனடியாக சரியாகிவிட்டது. அவரது உடலில் ஆன்டிபாடிகள் அதிகரித்து அவர் நலமுடன் இருப்பதாக புடின் தெரிவித்திருந்தார். எனினும் இந்த தடுப்பு மருந்தின் நம்பகத்தன்மை குறித்து விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பிய நிலையிலும் இந்த மருந்தை புடின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் புடின் மகள் குறித்தும் ரஷ்யாவின் தடுப்பு மருந்து குறித்தும் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.

அதில் ஒன்று, தடுப்பு மருந்து போடப்பட்ட புடின் மகள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. அதாவது அவருக்கு இரண்டாவது டோஸ் மருந்து கொடுக்கப்பட்டவுடன் அவரது உடலின் வெப்பநிலை அதிகரித்ததாகவும் அதனால் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு இறந்ததாகவும் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்.
இந்த தகவல்களில் துளிக் கூட உண்மை இல்லை. எனவே இதை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இது போல் பொய்யான செய்தியை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைகள் வலுக்கின்றன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications