தரைவிரிப்புகளை உண்பதற்கு தடையா?.. சென்னை விமான நிலையத்தில் போர்டா?.. அதெல்லாம் பொய்! நம்பாதீங்க!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் "தரைவிரிப்புகள் உண்பது இங்கு தடை செய்யப்பட்டுள்ளது" என வைக்கப்பட்டுள்ள பலகை உண்மையில்லை என்றும் அதை யாரோ மார்பிங் செய்து வைரலாக்கி வருவதும் தெரியவந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் "தரைவிரிப்புகளை உண்பது கட்டாயம் தடைசெய்யப்பட்டுள்ளது" என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் பரவி வந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள் என்ன முட்டாள்தனமான அறிவிப்பு இது, யாராவது தரைவிரிப்புகளை உண்பார்களா என கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் இந்த அறிவிப்பு பலகையுடன் கூடிய புகைப்படத்தை நடிகை சபானா ஆஸ்மி வெளியிட்டுள்ளார். அதில் நான் ஒரு போதும் தரைவிரிப்புகளை உண்டதில்லை என தெரிவித்துள்ளார்.
இவரது ட்வீட்டுக்கு விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் தரைவிரிப்புகள் குறித்து விமான நிலையம் பெயர் பலகை வைத்துள்ளதாக வைரலாகும் பலகை மார்பிங் செய்யப்பட்டது. இது 2015 ஆம் ஆண்டு முதல் வைரலாகி வருகிறது.

இதை யாரும் நம்ப வேண்டாம் என 2019ஆம் ஆண்டு சென்னை விமான நிலைய ஆணையம் அறிவிப்பையும் வெளியிட்டது. உண்மையை ஆராயாமல் யாரும் இது போன்ற படங்களை வைரலாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டதையும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Fact Check
வெளியான செய்தி
தரைவிரிப்புகள் உண்பது தடை செய்யப்பட்டுள்ளது என சென்னை விமான நிலையம் அறிவிப்பு
முடிவு
தரைவிரிப்புகள் உண்பது தடை செய்யப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பையும் தாங்கள் வெளியிடவில்லை என விமான நிலையம் விளக்கம்












Click it and Unblock the Notifications