Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact Check: பார்சல் டெலிவரிக்கு அட்ரஸ் கேட்டு மெசேஜ்! இந்தியா போஸ்ட் பெயரில் மோசடி.. உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பார்சல் ஒன்று டெலிவரி செய்யப்படாமல் இருப்பதாகவும், சரியான அட்ரஸை கொடுத்து பார்சலை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐபோன் பயனாளர்களுக்கு இந்திய தபால் துறையிடமிருந்து மெசேஜ் வந்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதன் உண்மைத் தன்மை என்ன? இது குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது.

சமீப காலங்களாக செல்போன், ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கவர்ச்சிகரமான வாசகங்களுடன் கூடிய லிங்க்கை அனுப்பிவிட்டு, இதை கிளிக் செய்தால் பரிசு கிடைக்கும் என்றெல்லாம் எஸ்எம்எஸ் அனுப்பி பணம் பறிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மோசடிக்காரர்கள் தற்போது புதிய யுக்தியை கையில் எடுத்திருக்கின்றனர்.

Fact check iPhone Crime

அதாவது, "உங்கள் பார்சல் குடோனுக்கு வந்துவிட்டது, நாங்கள் இரண்டு முறை டெலிவரி செய்ய முயற்சித்தோம். ஆனால், உங்கள் முகவரி முழுமையாக இல்லாததால் அதை அனுப்ப முடியவில்லை. எனவே உங்கள் முகவரி விவரங்களை 48 மணி நேரத்திற்குள் உள்ளிடுங்கள். இல்லையெனில், உங்கள் பார்சல் திருப்பி அனுப்பி வைக்கப்படும். அப்டேட் முடிந்ததும், 24 மணி நேரத்திற்குள் பார்சலை உங்களுக்கு டெலிவரி செய்துவிடுவோம். இப்படிக்கு இந்தியா போஸ்ட்!" என ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு மெசேஜ் வந்திருக்கிறது.

ஒன்றிரண்டு அல்லாமல் ஆயிரக்கணக்கான பயனாளர்களுக்கு இந்த மெசேஜ் வந்திருக்கிறது. எனவே சந்தேகத்தின் பேரில் இது குறித்து ஐபோன் பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

தொடர் புகார்களையடுத்து இது குறித்து மத்திய அரசு எச்சரிக்கை செய்திருக்கிறது. அதாவது இப்படி வரும் மெசேஜ்கள் உண்மையானது கிடையாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. "புதிய நாடுகடந்த ஊழல் எச்சரிக்கை: iPhone பயனர்கள் முன்பின் தெரியாத எண்களிலிருந்து iMessage மூலம் மோசடி செய்திகளைப் பெறுகின்றனர். சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான மெசேஜ்களை பிளாக் செய்ய வேண்டும்" என உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறது.

ஐபோன் பயனர்கள் மெசேஜில் வரும் லிங்கை கிளிக் செய்யும் போது, ​​டெலிவரியை உறுதி செய்ய ஒரு சிறிய தொகையைச் செலுத்துமாறு கேட்கப்படுவார்கள். இந்த தொகையை செலுத்தி, OTPயை உள்ளிடும்போது, ​​மோசடிக்காரர்கள் பயனாளரின் முக்கியமான தரவுகள் அனைத்தையும் திருடி விடுவார்கள். மட்டுமல்லாது வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தையும் சுருட்டிக்கொள்வார்கள் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். எனவே, சந்தேகம்படும்படியான எந்த லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Fact Check

வெளியான செய்தி

டெலிவரி செய்யப்படாமல் இருக்கும் பார்சல்கள் குறித்து இந்திய தபால் துறை ஐபோன் பயனாளர்களுக்கு எஸ்எம்எஸ்களை அனுப்புகிறது.

முடிவு

இந்திய தபால் துறை இப்படி எந்த எஸ்எம்எஸ்களையும் அனுப்பவில்லை. இப்படி வரும் மெசேஜ்கள் போலியானவை என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ரேட்டிங்

false
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+