Fact Check: பார்சல் டெலிவரிக்கு அட்ரஸ் கேட்டு மெசேஜ்! இந்தியா போஸ்ட் பெயரில் மோசடி.. உண்மை என்ன?
சென்னை: பார்சல் ஒன்று டெலிவரி செய்யப்படாமல் இருப்பதாகவும், சரியான அட்ரஸை கொடுத்து பார்சலை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐபோன் பயனாளர்களுக்கு இந்திய தபால் துறையிடமிருந்து மெசேஜ் வந்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதன் உண்மைத் தன்மை என்ன? இது குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது.
சமீப காலங்களாக செல்போன், ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கவர்ச்சிகரமான வாசகங்களுடன் கூடிய லிங்க்கை அனுப்பிவிட்டு, இதை கிளிக் செய்தால் பரிசு கிடைக்கும் என்றெல்லாம் எஸ்எம்எஸ் அனுப்பி பணம் பறிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மோசடிக்காரர்கள் தற்போது புதிய யுக்தியை கையில் எடுத்திருக்கின்றனர்.

அதாவது, "உங்கள் பார்சல் குடோனுக்கு வந்துவிட்டது, நாங்கள் இரண்டு முறை டெலிவரி செய்ய முயற்சித்தோம். ஆனால், உங்கள் முகவரி முழுமையாக இல்லாததால் அதை அனுப்ப முடியவில்லை. எனவே உங்கள் முகவரி விவரங்களை 48 மணி நேரத்திற்குள் உள்ளிடுங்கள். இல்லையெனில், உங்கள் பார்சல் திருப்பி அனுப்பி வைக்கப்படும். அப்டேட் முடிந்ததும், 24 மணி நேரத்திற்குள் பார்சலை உங்களுக்கு டெலிவரி செய்துவிடுவோம். இப்படிக்கு இந்தியா போஸ்ட்!" என ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு மெசேஜ் வந்திருக்கிறது.
ஒன்றிரண்டு அல்லாமல் ஆயிரக்கணக்கான பயனாளர்களுக்கு இந்த மெசேஜ் வந்திருக்கிறது. எனவே சந்தேகத்தின் பேரில் இது குறித்து ஐபோன் பயன்பாட்டாளர்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
தொடர் புகார்களையடுத்து இது குறித்து மத்திய அரசு எச்சரிக்கை செய்திருக்கிறது. அதாவது இப்படி வரும் மெசேஜ்கள் உண்மையானது கிடையாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. "புதிய நாடுகடந்த ஊழல் எச்சரிக்கை: iPhone பயனர்கள் முன்பின் தெரியாத எண்களிலிருந்து iMessage மூலம் மோசடி செய்திகளைப் பெறுகின்றனர். சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான மெசேஜ்களை பிளாக் செய்ய வேண்டும்" என உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறது.
ஐபோன் பயனர்கள் மெசேஜில் வரும் லிங்கை கிளிக் செய்யும் போது, டெலிவரியை உறுதி செய்ய ஒரு சிறிய தொகையைச் செலுத்துமாறு கேட்கப்படுவார்கள். இந்த தொகையை செலுத்தி, OTPயை உள்ளிடும்போது, மோசடிக்காரர்கள் பயனாளரின் முக்கியமான தரவுகள் அனைத்தையும் திருடி விடுவார்கள். மட்டுமல்லாது வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தையும் சுருட்டிக்கொள்வார்கள் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். எனவே, சந்தேகம்படும்படியான எந்த லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Fact Check
வெளியான செய்தி
டெலிவரி செய்யப்படாமல் இருக்கும் பார்சல்கள் குறித்து இந்திய தபால் துறை ஐபோன் பயனாளர்களுக்கு எஸ்எம்எஸ்களை அனுப்புகிறது.
முடிவு
இந்திய தபால் துறை இப்படி எந்த எஸ்எம்எஸ்களையும் அனுப்பவில்லை. இப்படி வரும் மெசேஜ்கள் போலியானவை என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ரேட்டிங்
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications