Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact Check: கூடங்குளம் அணுக்கதிர்வீச்சால் கொத்து கொத்தாக மீன்கள் இறந்து கரை ஒதுங்கின? உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்பரப்பில் ஆயிரக்கணக்கான கிளாத்தி வகை மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளிப்பட்ட அணுக் கதிர் வீச்சால் மீன்கள் கரை ஒதுங்கிவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் கூடங்குளத்தில் அணுக்கதிர் வீச்சால் மீன்கள் இறந்து கரை ஒதுங்கவில்லை என தமிழ்நாடு அரசின் ஃபேக்ட்செக் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே உள்ள பெருமணல், பஞ்சல் உள்ளிட்ட பல கிராமங்களில் கடற்பரப்பில் கிளாத்தி வகை மீன்கள் கொத்து கொத்தாக இறந்த நிலையில் கரை ஒதுங்கின. கூடங்குளத்தைச் சுற்றிய கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் மிகப் பெரிய அளவில் துர்நாற்றம் வீசியது.

fact check kudankulam

இதனையடுத்து கடற்பரப்புக்கு வந்த பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள், கிளாத்தி வகை மீன்கள் பல்லாயிரக்கணக்கில் கரை ஒதுங்கியது தொடர்பாக ஆய்வு நடத்தினர். அதேநேரத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து அணுக்கதிர் வீச்சு வெளிப்பட்டதால்தான் கிளாத்தி வகை மீன்கள் பல்லாயிரக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கிவிட்டதாகவும் தகவல்கள் பரவின.

ஆனால் கூடங்குளம் அணுக்கதிர் வீச்சால் இந்த மீன்கள் கரை ஒதுங்கவில்லை என தமிழ்நாடு அரசின் ஃபேக்ட் செக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மீன்வளத்துறை அளித்த விளக்கத்தில், கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் கிளாத்தி மீன்கள் வரத்து அதிகரித்தது. இதனால் விற்பனையாகாத மீன்களை மீனவர்கள் கடலில் கொட்டினர். இந்த மீன்கள்தான் நீரோட்டம் காரணமாக கூடங்குளம் கடற்கரை கிராமங்களில் ஒதுங்கின. கூடங்குளம் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய மீன்களை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது. ஆகையால் கூடங்குளத்தில் அணுக்கதிர் வீச்சால் மீன்கள் இறந்தது வதந்திதான் என்பது உறுதியானது.

பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]

Fact Check

வெளியான செய்தி

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளிப்பட்ட அணுக்கதிர் வீச்சால் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.

முடிவு

கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் கொட்டியதால் நீரோட்டத்தில் மீன்கள் அடித்துவரப்பட்டன

ரேட்டிங்

Mostly False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+