Fact Check: கூடங்குளம் அணுக்கதிர்வீச்சால் கொத்து கொத்தாக மீன்கள் இறந்து கரை ஒதுங்கின? உண்மை என்ன?
சென்னை: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்பரப்பில் ஆயிரக்கணக்கான கிளாத்தி வகை மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளிப்பட்ட அணுக் கதிர் வீச்சால் மீன்கள் கரை ஒதுங்கிவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் கூடங்குளத்தில் அணுக்கதிர் வீச்சால் மீன்கள் இறந்து கரை ஒதுங்கவில்லை என தமிழ்நாடு அரசின் ஃபேக்ட்செக் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே உள்ள பெருமணல், பஞ்சல் உள்ளிட்ட பல கிராமங்களில் கடற்பரப்பில் கிளாத்தி வகை மீன்கள் கொத்து கொத்தாக இறந்த நிலையில் கரை ஒதுங்கின. கூடங்குளத்தைச் சுற்றிய கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் மிகப் பெரிய அளவில் துர்நாற்றம் வீசியது.

இதனையடுத்து கடற்பரப்புக்கு வந்த பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள், கிளாத்தி வகை மீன்கள் பல்லாயிரக்கணக்கில் கரை ஒதுங்கியது தொடர்பாக ஆய்வு நடத்தினர். அதேநேரத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து அணுக்கதிர் வீச்சு வெளிப்பட்டதால்தான் கிளாத்தி வகை மீன்கள் பல்லாயிரக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கிவிட்டதாகவும் தகவல்கள் பரவின.
ஆனால் கூடங்குளம் அணுக்கதிர் வீச்சால் இந்த மீன்கள் கரை ஒதுங்கவில்லை என தமிழ்நாடு அரசின் ஃபேக்ட் செக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மீன்வளத்துறை அளித்த விளக்கத்தில், கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் கிளாத்தி மீன்கள் வரத்து அதிகரித்தது. இதனால் விற்பனையாகாத மீன்களை மீனவர்கள் கடலில் கொட்டினர். இந்த மீன்கள்தான் நீரோட்டம் காரணமாக கூடங்குளம் கடற்கரை கிராமங்களில் ஒதுங்கின. கூடங்குளம் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய மீன்களை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது. ஆகையால் கூடங்குளத்தில் அணுக்கதிர் வீச்சால் மீன்கள் இறந்தது வதந்திதான் என்பது உறுதியானது.
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]

Fact Check
வெளியான செய்தி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளிப்பட்ட அணுக்கதிர் வீச்சால் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.
முடிவு
கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் கொட்டியதால் நீரோட்டத்தில் மீன்கள் அடித்துவரப்பட்டன
ரேட்டிங்
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications