காந்திக்கு பதில் ராமர்.. 500 ரூபாயில் இடம்பெறும் அயோத்தி ராமர் கோவில்? வெளியான போட்டோ.. உண்மையா
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்திக்கு பதில் ராமரின் படமும், பின்பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் செங்கோட்டைக்கு பதில் அயோத்தி ராமர் கோவில் படமும் இடம்பெறுவதாக போட்டோக்கள் பரவி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்து விபரம் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. கோவில் பணிகள் முழுவதுமாக இன்னும் முடியவில்லை. முதற்கட்ட பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் நேற்று முதல் தொடங்கின. வரும் 22ம் தேதி மாலை வரை இந்த பூஜைகள் நடைபெற உள்ளது. ஜனவரி 22ல் நடக்கும் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு 500 ரூபாய் நோட்டு என்பது மொத்தமாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவுகிறது. அதாவது தற்போதைய 500 ரூபாய் நோட்டின் முன்பக்கத்தில் ‛தேசப்பிதா' மகாத்மா காந்தியின் போட்டோ இருக்கும். பின்பகுதியில் டெல்லி செங்கோட்டையின் போட்டோ என்பது உள்ளது.
ஆனால் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு இந்த போட்டோக்கள் என்பது மாற்றம் செய்யப்பட உள்ளதாக இணையதளத்தில் போட்டோக்கள் பரவி வருகின்றன. அதன்படி 500 ரூபாய் நோட்டின் முன்பகுதியில் கடவுள் ராமர் போட்டோ என்பது இடம் பெறும். பின்பக்கத்தில் டெல்லி செங்கோட்டைக்கு பதில் அயோத்தி ராமர் கோவில் மற்றும் வில், அம்பு இடம்பெறும் என போட்டோ பரப்பப்பட்டு வருகிறது.
இதுபற்றிய தகவலை பலரும் தங்களின் வலைதள பக்கங்களில் பகிர்ந்து இதனை கட்டாயம் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கூறுகின்றன். மேலும் சிலர் இந்த மாற்றம் என்பது வரவேற்க்கத்தக்கது எனவும், மற்றொரு தரப்பினர் காந்தியின் போட்டோவை எந்த காரணம் கொண்டும் 500 ரூபாய் நோட்டில் இருந்து மாற்றம் செய்யக்கூடாது எனவும் கூறி வருகின்றனர்.
இதனால் இது தற்போது விவாதமாகி உள்ளது. இதுபற்றி ஆய்வு செய்தபோது மத்திய அரசு அல்லது ரிசர்வ் வங்கி தரப்பில் 500 ரூபாய் நோட்டில் காந்திக்கு பதில் ராமர், செங்கோட்டைக்கு பதில் அயோத்தி ராமர் கோவில் என மாற்றம் செய்வது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதும், தற்போது ராமர் மற்றும் அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்டவை 500 ரூபாய் நோட்டில் இருப்பது போன்று பரவும் போட்டோ என்பது போலியானதும் உறுதியாகி உள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கியின் Know Your Notes என்ற ஆப்ஷனில் சென்று பார்த்தால் அதில் 500 ரூபாய் நோட்டில் மாற்றம் செய்வது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை. மாறாக ரூ.500 நோட்டில் மகாத்கா காந்தி மற்றும் செங்கோட்டையின் போட்டோ இடம்பெற்றிருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Fact Check
வெளியான செய்தி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிறகு 500 ரூபாய் நாட்டில் காந்திக்கு பதில் ராமர், செங்கோட்டைக்கு பதில் அயோத்தி ராமர் கோவில் போட்டோ இடம்பெற உள்ளதாக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
முடிவு
500 ரூபாய் நோட்டில் மாற்றம் செய்வது தொடர்பாக மத்திய அரசு அல்லது ரிசர்வ் வங்கி சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications