Fact Check: மகளிருக்கான ரூ 5000 உரிமைத் தொகையை வங்கி கணக்கில் இருந்து திருப்பி எடுக்கிறதா அரசு?
சென்னை: தமிழக அரசு சார்பில் 1.31 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை ரூ 5000-த்தை உடனே எடுத்துக் கொள்ளாவிட்டால் வங்கியிலிருக்கும் பணத்தை அரசு திருப்பி எடுக்கும் என்ற பொய் தகவல் பரவி வருகிறது. இதை தமிழக அரசு மறுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு உண்மை சரிபார்க்கம் (TN Fact Check) தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மகளிருக்கு அரசு வழங்கிய ரூ.5,000 தொகை திருப்பி எடுக்கப்படும் என்று பரவும் வதந்தி!
பரவிய செய்தி
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கிய உரிமைத் தொகையை வங்கியிலிருந்து மாலைக்குள் எடுக்காவிட்டால் பணம் திருப்பி எடுக்கப்படும் என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ.5 ஆயிரம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தியது.
இத்தொகையை அன்று மாலைக்குள் வங்கியிலிருந்து எடுத்து விட வேண்டும் என்பது முற்றிலும் தவறான தகவல். தமிழ்நாடு அரசு இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தவறான தகவலைப் பரப்பாதீர்! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Fact Check
வெளியான செய்தி
கலைஞர் உரிமைத் தொகை ரூ 5 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் இருந்து மாலைக்குள் எடுக்காவிட்டால் அதை அரசே திருப்பி எடுத்துக் கொள்ளும்.
உண்மை என்ன
கலைஞர் உரிமைத் தொகையாக ரூ 5 ஆயிரத்தை தமிழக அரசு வரவு வைத்துள்ள நிலையில் அதை திருப்பி எடுத்துவிடும் என்ற செய்தி பொய்யானது.
ரேட்டிங்
False
நடந்தது என்ன
கலைஞர் உரிமைத் தொகை என்ற பெயரில் மாதாமாதம் ரூ 1000-த்தை தகுதியுள்ள மகளிருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலை காரணம் காட்டி ரூ 1000 உரிமைத் தொகையை பாஜக நிறுத்த பார்ப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கு தலா ரூ 1000 என ரூ 3000த்தையும், கோடைக்கால சிறப்பு தொகை ரூ 2 ஆயிரத்தையும் தமிழக அரசு மகளிர் கணக்கில் வரவு வைத்தது.
இதை தமிழகத்தில் இந்த திட்டத்தால் பயன்பெறும் மகளிர் கொண்டாடி மகிழ்கிறார்கள். பாஜக அரசு முடக்க பார்த்த நிலையில் ஸ்டாலின் முன்கூட்டியே நேற்று ஒரே நாளில் 1.31 கோடி பேருக்கு தலா ரூ 5000 வீதம் ரூ 6550 கோடியை வரவு வைத்துள்ளார்.
தமிழக வரலாற்றில் இதுவரை ஒரு திட்டத்திற்கு ஒரே நாளில் இத்தனை கோடி ரூபாயை செலவு செய்தது இதுதான் முதல் முறை என்கிறார்கள். அது போல் ஒரே நாளில் இத்தகைய பெரிய தொகையை விடுவித்ததும் தமிழக நிதித் துறை வரலாற்றில் இதுவே முதல் முறையாம். இதனால் திமுக கூட்டணி கட்சிகள் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி வருகின்றன.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications