Fact check: விருதுநகர் அருகே காட்டுப்பன்றி மனிதரை புரட்டி எடுத்ததாக பரவும் வீடியோ! உண்மை என்ன?
சென்னை: விருதுநகர் அருகே காட்டுப்பன்றி மனிதரைத் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், பரவி வரும் இந்த வீடியோ ஒடிசா மாநிலத்தில் நடந்த சம்பவத்தின் காணொளி.
சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் அதேநேரத்தில், சமூக வலைதளங்களின் வாயிலாக பொய்யான செய்திகளும் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றன. அந்தவகையில், வீடியோ ஒன்று சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் காடுத்தீயாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், காட்டுப்பன்றி ஒன்று, சாலையோரம் ஒரு நபரை கடுமையாகத் தாக்கி புரட்டி எடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவுடன் இது விருதுநகர் அருகே பாலவநத்தம் எனும் பகுதியில் உள்ள சாலையில் காட்டுப்பன்றி ஒன்று மனிதரைத் தாக்கியது என குறிப்பிடப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த வீடியோ 2021 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள முடுலிபள்ளி எனும் கிராமம் ஒன்றில் காட்டுப்பன்றி தாக்கியபோது எடுக்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட காணொளியை தமிழ்நாட்டில் நடந்ததாக கூறி பரப்பி வருகின்றனர்.

Fact Check
வெளியான செய்தி
விருதுநகர் அருகே சாலையில் காட்டுப்பன்றி ஒன்று மனிதரைத் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
முடிவு
இந்த வீடியோ 2021 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் காட்டுப்பன்றி தாக்கியபோது எடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications