லாக்டவுன்.. கடைகளை திறக்கும் மூடும் நேரம் குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை
டெல்லி: லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு வகையான கடைகளை திறப்பது, மூடுவது தொடர்பாக அரசு நேரத்தை நிர்ணயித்துள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சமூக வலைதளங்களில் கடைகளை திறப்பு மற்றும் மூடும் நேரம் தொடர்பான ஒரு செய்தி தகவல் பரவி வருகிறது. அதில் ஒவ்வொரு வகையான கடைகளும் இந்த நேரத்தில் திறக்கப்பட்டு இந்த நேரத்தில்தான் மூட வேண்டும் என்கிற தகவல் இடம்பெற்றுள்ளது.

இத்தகைய செய்திகள் உண்மை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இதுபோல எந்த ஒரு வழிகாட்டுதலையும் இதுவரை வெளியிடவில்லை.
லாக்டவுன் 4.0-ல் எப்படியான கட்டுப்பாடுகள் இருக்கும்? தளர்வுகள் இருக்கும்? என்பது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிப்புகளை வெளியிட உள்ளது. மாநில அரசுகளின் பரிந்துரைகள் ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
4.0 லாக்டவுனில் பொது போக்குவரத்தை எப்படி படிப்படியாக செயல்படுத்துவது என்பது குறித்து வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட உள்ளது. அரசு பேருந்துகளை ரெட் ஜோனில் கூட இயக்கலாமா என்பது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
என்னதான் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் கட்டாயமாக்கப்படும். டாக்ஸிகளில் 2 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆட்டோக்களில் டிரைவரை தவிர ஒரே ஒரு பயணிதான் பயணிக்க இயலும் என்கிற வகையில் கட்டுப்பாட்டு தளர்வுகள் இருக்கும் என்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications