Fact Check: பாபர் கிபி 1556ல் ராமர் கோயிலை இடித்து மசூதி கட்டினாரா? பாஜக வெளியிட்ட வீடியோ உண்மையா?
சென்னை: முகலாய பேரரசர் பாபர், கி.பி 1556ம் ஆண்டு ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக பாஜகவின் ஆதரவாளர்கள் செய்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால், சமூக செயற்பாட்டாளர்கள் இதனை மறுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

22ஆம் தேதி பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
Babur demolished the birthplace of Shri Ram and built the mosque in 1556. Watch "Ram Rajya - Sangharsh Se Parinam Tak" Series 1 "Amavasya" to know more about the culmination of the temple-building struggle in the 20th century...
— Chandrakant Patil (@ChDadaPatil) January 10, 2024
बाबरने श्री राम जन्मस्थानी असलेले मंदिर पाडून 1556… pic.twitter.com/LZbZSx90Hx
கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராமர் கோயில் குறித்து பாஜகவினரால் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த தகவல்களில் சில தகவல்கள் போலியானவை என்று நிரூபிக்கப்பட்டு வருகின்றன.
இப்படி இருக்கையில், பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை 8 மணியளவில் 1.26 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அதில், "கி.பி 1556 ஆம் ஆண்டில், பாபர் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலை இடித்து, மசூதியை கட்டினார். ராமராஜ்யம் - போராட்டத்திலிருந்து முடிவு வரை, அத்தியாயம் 1 - அமாவாசை, 20ம் நூற்றாண்டில் கோவில் கட்டுவதற்கான போராட்டத்தின் கடைசி போர் மணி எப்படி ஒலித்தது என்பதை பாருங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விடியோவை பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் ஷோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருந்தனர். ஆனால் இது உன்மையான தகவல் கிடையாது என சமூக செயற்பாட்டாளர்கள் ஆதாரத்துடன் விளக்கியுள்ளனர். அதாவது,
கி.பி 1556 இல், பாபர் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலை இடித்து ஒரு மசூதியை கட்டினார்.
— Immanuvel Dinakaran (@Imman_BJP) January 10, 2024
ராமராஜ்யம்-போராட்டத்திலிருந்து முடிவு வரை அத்தியாயம் 1 அமாவாசையில் பாருங்கள், 20 ஆம் நூற்றாண்டில் கோவில் கட்டுவதற்கான போராட்டத்தின் கடைசி போர் முழக்கம் எப்படி ஒலித்தது.@blsanthosh… pic.twitter.com/BpNC0k3rMN
"இந்தியாவை ஆட்சி செய்து வந்த இப்ராகிம் லோடியை வீழ்த்த, அவருடைய எதிரி தெளலத்கான் லோடியின் வேண்டுகோளின் பெயரிலேயே பாபர் இந்தியாவிற்குள் வந்திருக்கிறார். இப்படி வந்தவர் பின்னர் முகலாய பேரரசை தோற்றுவித்தார். இவரது காலத்தில்தான் முகலாய பேரரசு இந்தியாவில் வளர்ந்தது. பல்வேறு நிலப்பரப்புகளை கைப்பற்றி இவர், இறுதியாக கி.பி 1529-ல் நடைபெற்ற காக்ரா போரில் வெற்றி பெற்று திரும்பி வரும் வழியில் கி.பி 1530-ல் இறந்தார்" என்று கூறியுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் 11ம் வகுப்பு பாடபுத்தகத்திலும் இந்த விவகரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது, "பாபருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அவரது வாரிசான ஹூமாயூன், 1530 முதல் 1540 வரையிலும், பின்னர் ஷெர்ஷா அரசரின் தோல்விக்கு பின்பு மீண்டும் 1555 முதல் 1556 வரையிலும் இந்தியாவை ஆட்சி செய்தார். இறுதியாக கி.பி 1556-ல் தனது டில்லி கோட்டையின் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து ஹூமாயூன் இறந்து போனார்" என்கிற தகவல்களையும் ஆதாரப்பூர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை என்ன?: எனவே, கி.பி 1556 ஆம் ஆண்டில், பாபர் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலை இடித்து, மசூதியை கட்டினார் என்கிற தகவல் உண்மையில்லை என்று தெரிய வருகிறது.

Fact Check
வெளியான செய்தி
பாஜக வெளியிட்ட வீடியோவில் “ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலை இடித்து, முகலாய மன்னர் பாபர், கி.பி 1556 ஆம் ஆண்டில், மசூதியை கட்டினார்” என்று கூறப்பட்டிருக்கிறது.
முடிவு
முகலாய மன்னர் பாபர், கி.பி 1529-ல் நடைபெற்ற காக்ரா போரில் வெற்றி பெற்று திரும்பி வரும் வழியில் கி.பி 1530 ஆண்டிலேயே இறந்தார்.
ரேட்டிங்
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications