கொரோனா வைரஸ்: 1000 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தல் முகாமை ராணுவம் உருவாக்குகிறது- செய்தி உண்மையா?
டெல்லி: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்காக 1000 படுக்கைகளுடனான தனிமைப்படுத்துதல் முகாமை ராணுவம் உருவாக்கி வருகிறது என வெளியான செய்திகள் உண்மையா? என பார்ப்போம்.
3 படங்களுடன் ராணுவம், 1000 படுக்கைகளுடனான தனிமைப்படுத்துதல் முகாமை உருவாக்குகிறது என தகவல்கள் வெளியாகி இருந்தன. ராஜஸ்தானின் பார்மரில் இந்த முகாம்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தன.
அந்த படங்களில் மருத்துவ வசதிகள், மருத்துவமனை அறை, ராணுவ மருத்துவர்கள் குழு என்கிற கேப்சனும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த செய்தி ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டிருந்தன.
உண்மையில் இந்த 3 படங்களும் மிகவும் பழையவை. வெவ்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட வெவ்வேறு நாடுகளின் புகைப்படங்கள்.
மேலும் இப்படியான மருத்துவ முகாம் எதனையும் அமைக்கவில்லை என்று ராணுவமும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மறுத்து விளக்கமும் அளித்திருக்கிறது.