பேரைக் கேட்டாலே சும்மா அதிரப் போகுது.. தங்கத்தின் விலை டபுள் ஆகப் போகுது! நிபுணர் கொடுத்த வார்னிங்
சென்னை: உலகம் முழுவதும் தங்கத்தின் விலை தினந்தோறும் புதிய சாதனைகளை எட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க பங்கு சந்தை நிறுவனம் ஜெஃப்ரிஸ் (Jefferies) நிறுவனத்தின் தலைமை அதிகாரியான க்ரிஸ் வுட், தங்கத்தின் நீண்டகால விலை குறித்து மிகப்பெரிய கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தங்கம் விலை இருமடங்காகும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் வரிவிதிப்பு, சர்வதேச போர் பதற்றம் உள்ளிட்ட அவற்றின் காரணமாக தங்கம் விலை ஏறுமுகமாக இருக்கிறது. சிறிது விலை இறங்கினாலும், அடுத்த நாள் அதனை விட அதிகமாக விலை உயர்கிறது.

கடந்த 1980ஆம் ஆண்டில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு வெறும் 850 அமெரிக்க டாலராக இருந்தது. அதற்குப் பிறகு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், அமெரிக்காவின் பணவியல் கொள்கைகள், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மெதுவாக உயரத் தொடங்கியது.
தங்கம் விலை உயர்வு
இந்த வாரம் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவை அடுத்து தங்கம் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $3,700 என்ற சாதனை உச்சத்தை தொட்டது. எனினும் வட்டி குறைப்புகள் ஏற்கனவே சந்தையில் எதிர்பார்க்கப்பட்டதால் சிறிய அளவில் தான் சரிவு ஏற்பட்டது. இருந்தாலும் தங்கத்தின் விலை நீண்டகால போக்கு இன்னும் உயர்வை நோக்கியே பயணிக்கும் என்கின்றனர் உலக அளவிலான பொருளாதார நிபுணர்கள். இந்நிலையில், தங்கம் விலை இருமடங்காகும் எனவும், சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 6,600 டாலர்களாக உயரக்கூடும் என ஜெஃப்ரிஸ் நிறுவனம் கூறியுள்ளது.
ஜெஃப்ரிஸ்
இதுதொடர்பாக, ஜெஃப்ரிஸ் (Jefferies) நிறுவனத்தின் தலைமை அதிகாரியான க்ரிஸ் வுட் கருத்துப்படி, 1980 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை அமெரிக்கர்களின் ஒருவர் செலவிடக்கூடிய வருமானத்தில் சுமார் 10% மதிப்பை கொண்டிருந்தது. அதே நிலைமை மீண்டும் ஏற்பட்டால், தங்கம் இன்று 6,571 டாலர் வரை செல்ல வேண்டும். அதனால் தான் அவர் 6,600 டாலர் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார்.
க்ரிஸ் வுட் கணிப்பு
1950ஆம் ஆண்டு தங்கத்தின் விலை 850 டாலராக இருந்த நிலையில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், அமெரிக்காவின் பண கொள்கை, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை மெதுவாக உயர தொடங்கியது. அப்போது பேசிய கிரிஷ் வுட் தங்கத்தின் விலை 2002 ஆம் ஆண்டு 3400 டாலர் வரை உயரும் என கணித்திருந்தார் 2005இல் அதை 3700 என திருத்தி இருந்தார். அதற்குப் பிறகு 2016 இல் தங்கத்தின் விலை 4200 டாலர் வரை போகும் என கூறி இருந்தார். அவரது கணிப்பு பலிக்க தொடங்கியது.
உலக தங்க விலை
கொரோனா காலத்தில் அதாவது 2020ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிகப் பெரும் நெருக்கடியால் தங்கத்தின் விலை 5500 டாலருக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2025-ல் தங்கத்தின் விலை வரும் காலங்களில் 6600 டாலர் வரை உயரும் என கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில ஆண்டுகளில் உண்மையிலேயே தங்கத்தின் விலை 6600 வரை சென்றால் உலக பொருளாதாரத்திலும் இந்தியாவின் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்திய தங்கம் விலை
உலக சந்தையில் தங்க விலை தொடர்ந்து உயரும் போது, இந்தியாவில் தங்கம் வாங்கும் பழக்கமுள்ள பொதுமக்கள் மற்றும் நகைக்கடை வியாபாரிகளுக்கு பெரும் தாக்கம் ஏற்படும். திருமணம், விழாக்கள் போன்ற சமயங்களில் தங்கம் வாங்கும் போது கூடுதல் செலவாகும். ஆனால், ஏற்கனவே தங்கம் வைத்திருப்போருக்கு இது நல்ல செய்தியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு மெல்ல மெல்ல தங்கம் வாங்குவது பிற்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
-
தங்கம், வெள்ளி இறக்குமதி கட்டுப்பாடு.. மத்திய அரசின் திடீர் ஆக்ஷன்! தங்கம் விலை தாறுமாறா உயர போகுது? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம்.. இப்போது அடகு வைப்பது புத்திசாலித்தனமா? ‘பவுன்’ கணக்கு இதோ -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications